பண்டைத் தமிழ் நாகரிகம்
போல்.
69
இம்மூவரும் நாட்டிலிருப்பவர். முனிவரும் சித்தரும்
மலையிலிருப்பவர்.
முனிவர் அல்லது முனைவர் உலகப்பற்றை முற்றும் வெறுத்தவர். முனிதல் வெறுத்தல், முனைதல் வெறுத்தல்.
ஐயன் என்னும் சொல் விளக்கம்
அள் = செறிவு. அள்ளல் = நெருக்கம். அள்ளாடுதல் = செறிதல். அள்ளிருள் = செறிந்த இருட்டு. அள்ளுதல் = செறிதல்.
"சேரே திரட்சி,”(தொல்.46) என்னும் நெறிமொழிப்படி, செறிவுக் கருத்தினின்று பெருமைக் கருத்துத் தோன்றும்.
எ-டு. மொய்த்தல் = நெருங்குதல். மொய் = நெருக்கம்,பெருமை.
ளகர மெய்யீறு யகர மெய்யீறாகத்திரிதல் பெரு வழக்கு.
எ-டு: எள்(இளை)
எய்; கொள்
1
கொய்; சேழ் (சேள்) - சேய்
சேய்மை; தொள் - தொய்,நெள்(நள்) - நெய்; பள் - (பய்) - பயம்பு; பொள் - பொய்; வெள் வெய் - வெய்ம்மை வெம்மை
சொல்.334).
66
-
அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
=
ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”
வேண்டல் (தொல்.
என்னும் தொல்காப்பிய (56) நெறிமொழிப்படி, அய் என்பது ஐயாகும். ஒ.நோ:வள் - (வய்) - வை = கூர்மை.
பொள் - பொய் - (பய்) - பை = உட்டுளையுள்ளது.
இந்நெறி முறைகளின்படி, அள் - (அய்)ஐ என்றாகும். ஐ = பெருமை, பெரியோன், தந்தை, ஆசிரியன், தலைவன், அரசன், ன், அரசன், கணவன். இப்பொருள்கட்கெல்லாம் அடிப்படை பெரியோன் என்பதே.
இனி “ஐவியப் பாகும்." (தொல், 868) என்பதால், ஐ = வியக்கத் தக்க பெருமையுடையோன் என்றுமாம். ஐயள் = வியக்கத்தக்கவள் (ஐங்குறு. 255).
ஒரே சொல் பண்புப் பெயராகவும் பண்பாகு பெயராகவு மிருப்பதை அடிமை, அண்ணல், செம்மல் என்னும் சொற்களாலும் அறிக. அடிமை = அடிமைத் தன்மை, அடியான். அண்ணல் = பெருமை, பெரியோன்.
செம்மல் = 1, = 1, தலைமை.
"அருந்தொழில் முடித்த செம்மற் காலை" (தொல்.பொருள், 146).
-