உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அன்றாட நிகழ்ச்சி

அரசர் வாழ்க்கையில் அன்றாட நிகழ்ச்சிகள் பொதுவாகப் பின்வருமாறு நிகழ்ந்துவந்தன:

வைகறையில், அகவர் (சூதர்) அரசனின் பள்ளி மாடத்திற்கு வெளியே வாயிலருகு நின்று, அவன் முன்னோரின் புகழை இனிதாகப் பாடி அவனைத் துயிலுணர்த்துவர்.

அசரன் துயிலுணர்ந்து, அன்று செய்யவேண்டியவற்றைச் சிந்தித்துப் புலரும் வேளையிற் பள்ளிவிட்டெழுவன். அவன் எழுந் தமைக்கறிகுறியாகக் காலை முரசம் என்னும் பள்ளியெழுச்சி முரசம் அடிக்கப்பெறும்.

அரசன் எழுந்தபின், படைக்கலப் பயிற்சியிருப்பின் அதைச் செய்துவிட்டுக் காலைக்கடன்களை முடித்து நீராடி இறைவழிபாடு முற்றிக் காலையுணவுண்டு, ஓலக்க மண்டபத்திற்குச் செல்வன்.

அங்குக் கொடைமுரசு அடிக்கப்படும். பல்வேறிடத்தினின் றும், வந்திருக்கும், புலவர் பாணர் கூத்தர் முதலிய பரிசிலர், பாடியும் ஆடியும் தத்தம் திறமைகாட்டி, அதற்குத் தக அரசனிடம் பரிசு பெறுவர்.

காடை நிகழ்த்தி முடிந்தவுடன், முறைமுரசு அடிக்கப்படும். வழக்காளிகள் தத்தம் வழக்கைச் சொல்வதற்கு முன்னரே வந்திருப்பர். முரசடித்தவுடன் வழக்குக் கேட்கை தொடங்கும்.

அரசன் ஓலக்கமண்டபத்திலிருந்து கொடை நிகழ்த்தி முடிந்த பின், அவ்வக் கால வினைநிலைமைக் கேற்பச் சூழ்வினை மண்டபத் திற்கேனும் அறமன்றத்திற்கேனும் செல்லினும் செல்லலாம்; அன்றி ஓலக்க மண்டபத்திலேயே இருந்து தன்னாட் டெழுத்துப் போக்கு வரத்தையும் அயல்நாட்டெழுத்துப் போக்குவரத்தையும் கவனிப் பினும் கவனிக்கலாம்.

இவ் வினைகளெல்லாம் முற்பகல் நிகழ்ச்சிகளாகும்.