உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

பழந்தமிழாட்சி

முத்தமிழரசரையும் முடியுடை மூவேந்தர் என்று கூறுவது மரபு. ஒரே காலத்தில், ஓர் அரச குடியினர் பலர், மாற்றாந்தாய் மக்களும் மற்றத் தாயத்தாருமாகச் சமவுரிமையாளராக விருந்து, ஒரு பெருநாட்டின் வெவ்வேறு பகுதியைத் தனித்தனி ஆண்டுவரின், அவரனைவர்க்கும் முடியணியும் உரிமையும் கோவென்னும் பெயரும் உண்டு. பிற்காலத் தில், ஒரு பெருநாட்டினின்று தனியரசாய்ப் பிரிந்துபோன சிற்றரச ரும் இவ்வுரிமைகளைத் தாமே அடைந்துவிட்டனர்.

மூவேந்தருள் ஒருவன் இன்னொருவனை வென்று அடிப் படுத்தினவனாயின் அவனைப் பேரரசன் என்றும், அவனது அரசைப் பேரரசு என்றும் அழைக்கலாம். தமிழ் வேந்தருள்ளேயே ஒருவரிரு வரை வென்று இருமுடிப் பேரரசும் மும்முடிப் பேரரசும், அவருடன் ஈழவரசன் வேங்கை (கீழைச்சளுக்கி)யரசன் போன்றாரை வென்று பன்முடிப் பேரரசும் நிறுவிய சேர சோழ பாண்டியப் பேரரசர் பலராவர்.வடிம்பலம்ப நின்ற பாண்டியன், கரிகால் வளவன், சேரன் செங்குட்டுவன் என்பவர் பன்முடிப் பேரரசர்க்குச் சிறந்த எடுத்துக் காட்டாவர்.

மூவேந்தரும் தலைமையரசரென்றும், பிறரெல்லாம் சிற்றரச ரென்றும், மரபும் பெரும்பான்மையும்பற்றிப் பொதுவாகக் கூறப்படினும்; காலச் சக்கரத்தின் சுழற்சியால், இடையிடை, சிற்றரசக் குடியினர் பேரரசரும் பேரரசக் குடியினர் சிற்றரசரும் ஆயினர் என்றறிதல் வேண்டும். வேந்தர் குடியைச் சேர்ந்த சோழர், இடைக்காலத்தில், தாயப்போரால் புகார்ச் சோழரும் உறையூர்ச் சோழருமாகப் பிரிந்து கோக்கள் நிலையடைந்து, பின்பு அதுவு மின்றிப் பல்லவருக் கடங்கிய மன்னராகத் தாழ்ந்தனர். மன்னர் நிலையிலிருந்த பல்லவரோ, இதற்கு நேர் மாறாக, பேரரச நிலைக்கு யர்ந்தனர். இந் நிலைமை பின்பு மாறி, சோழர் மீண்டும் வேந்தரும் மாவேந்தரு மாயினர். இங்ஙனம் அரசக் குலங்களிடை மாறிமாறி நேர்ந்த ஏற்றிறக்கம் பலப்பல.