உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




‘மொழிஞாயிறு” தேவநேயப் பாவாணர்

தி.பி.1933 (1902)

தந்தை

தாய்

தி.பி. 1938(1907)

தொடக்கக் கல்வி உயர்நிலைக் கல்வி

தி.பி.1950-52(1919-21)

தி.பி. 1952-53(1921-22)

தி.பி.1955(1924)

தி.பி. 1956 (1925)

தி.பி. 1957 (1926)

தி.பி. 1959 (1928)

தி.பி.1961 (1930) தி.பி.1964 (1934)

வாழ்க்கைச் சுவடுகள்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் -26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார்.
ஞானமுத்து
பரிபூரணம்
வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி
நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு)
முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப்பள்ளியில் முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார்.
வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றி னார்.
மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார். (இவ் வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும் வெற்றி பெறவில்லை).

6

“கிறித்தவக் கீர்த்தனம்" - நூல் வெளியீடு.

உதவித் தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.

தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.

"சிறுவர் பாடல் திரட்டு" நூல் வெளியீடு.

திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.

முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு.

நேசமணி அம்மையாரை மணந்தார்.
தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றினார்.