உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

திரவிடத் தாய்

தோன்றவும் பெறும். பொதுவாக, சுமார் 500 கல் தொலைவாயின் புதுச் சொற்கள் தோன்றுவதும் மொழி திரிவதும் இயல்பு.

(2) எழுத்தொலித் திரிபு

இது தட்பவெப்பநிலை வேறுபாட்டாலும் சோம்பலாலும் நிகழ்வது.

மலையாளம்

ந 61

ஐ-அ

கன்னடம்

தெலுங்கு

ப- ஹ

ழ -ட-தட்பவெப்பநிலை ண ன - சோம்பல்

இனி ஊண், தொழில், பழக்கவழக்கம், அயன்மொழிக் கலப்பு முதலியவற்றாலும் எழுத்தொலி திரியும். எழுத்தொலித் திரிபு தட்பவெப்பநிலை ஊண் முதலியவற்றால் திரிவது

கிளைமொழியாக்கத் (Dialectic variation)திற்குக் காரணமாம்; சோம்பலால் திரிவது ஒலிமுறைக் கேடாம் (Phonetic decay).

(3) சொல் திரிபு

(4) பொருள் திரிபு

எ-டு: வெள்ளம் (த.) = வெள்ளையான புதுப்பெருக்கு நீர்; வெள்ளம் (ம.) = நீர்.

(5) இயற்கைத் தெரிப்பு (Natural Selection)

தாய்மொழியாகிய தமிழில் வீட்டைக் குறிக்கும் ஒருபொருட் பல சொற்களில், தெலுங்கு இல் என்னுஞ் சொல்லையும், கன்னடம் மன என்னுஞ் சொல்லையும் தெரிந்துகொண்டன.

(6) வழக்கற்ற சொல் வழங்கல்

(5.)

எ-டு: துன்னு = தை, (ம.), தெவு = தெகு(க.). நெய்த்தோர் = நெத்துரு

வழக்கற்ற சொல் வழங்கலாவது தமிழில் இதுபோது பேச்சுவழக்கற்று எழுத்துவழக்கில் மட்டுமுள்ள சொற்கள் பிறதிரவிட மொழிகளிற் பேச்சு வழக்கில் வழங்குவது.