உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

10. தமிழ்ப் பண்படுத்தம்

திரவிடத் தாய்

சிலர், வடநாட்டில் பிராகிருதம் என்னும் பழைய மொழிகளைப் பண்படுத்திச் சமற்கிருதம் அமைத்தாற் போலத் தென்னாட்டிலும் திரவிடமொழிகளைப் பண்படுத்தி அமைத்ததே செந்தமிழ் என்றும், தமிழுக்குப் பிற திரவிட மொழிகள் கிளைமொழி யெனப்படும் சேய்மொழிக ளாகாது இனமொழி யெனப்படும் உடன்பிறப்பு மொழிகளே யென்றும், திரவிடச் சொற்களின் வேர்களையெல்லாம் செந்தமிழல்லாததிரவிட மொழிகளில்தான் காணவேண்டும் என்றும் கூறுகின்றனர். இவர் திரவிட சரித்திரத்தையும் மொழி நூலையும் தமிழின் இயல்பையும் அறிந்திருந்தால் இங்ஙனங் கூறார்.

தமிழ்

பண்படுத்தப்பட்டது

உண்மையே.

ஆனால், அப்பண்படுத்தம் ஆரியமுறையில் வேர்ச்சொல் மறையும்படி திரித்துச் செய்யப்பட்டதன்று. முதற்றமிழரின் ஒலிமுறையும், சொற்களின் பழைய அல்லது திருத்த வடிவம், நுண்பொருள் விளக்கமும், சொற்றொடரின் வழாநிலையும் காத்துக்கொள்ளும் வரம்பீடே செந்தமிழப் பண்படுத்தமாம்.

டண முதலிய (மொழிமுதலாகா) வெழுத்துகளைக் கொண்டு முதற்றமிழரின் சொற்கள் தொடங்கவில்லை. அதனால், தமிழுக்கு முதன்முதல் இலக்கணம் வகுத்தபோது, அக்காலை மொழிமுதலாகா வெழுத்துகள் மொழிமுதலெழுத்துகளாகக் கொள்ளப்பட்டில.

கொச்சை வழக்கில், சொற்களின் னகரவீறுகள் ‘ன்', 'ம்' என்னும் ஈரெழுத்திற் கிடைப்பட்ட ஒலியாயும், ஐகார வீறுகள் அகர எகர ஈறுகளாகவும் ஒலிக்கும்.

எ-டு: நான் - நா(ன்); விலை - வில, நடத்தை - நடத்தெ. இவை தமிழில் வழுவாம்; ஆனால், இந்தியிலும் பிற திரவிட மொழிகளிலும் வழாநிலையாம். அவர்கள் என்னும் சொல்லை அவக என்று ஒலிப்பர். இது தமிழில் வழுவாம். ஆங்கிலத்தில் வழா நிலையாம். (Pearl என்னும் சொல்லின் ரகத்தை நோக்குக). இங்ஙனம் தமிழுக்கு இயல்பும் வழாநிலையும் அடிப்படையாயின், பிறமொழிகட்குத் திரிபும் வழாநிலையும் அடிப்படையாம்.