உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

மொழிநூல் நோக்கும் சொல்லாரா-ச்சியுமின்றித் தொல்காப்பியரைப் பெருமைப்படுத்த வேண்டுமென்றே கருதுபவர், தமிழுக்கு நேரும் இழிவையும் இழுக்கையும் எள்ளளவும் எண்ணிப் பார்ப்பதில்லை.

சிலர் 62ஆம் தொல்காப்பிய நூற்பாவின் பாடவேறுபாட்டிலுள்ள அவை' என்னும் சொல்லைச் ‘சகரக்கிளவி' என்பதனொடு தொடர்புபடுத்தி எண்ணிசைவில்லை யென்றும் மயங்குகின்றனர். ‘அவை’ என்பது முந்தின அடியிலுள்ள ‘அவற்று' என்பதையே சுட்டுகின்றது.

'சகரக்கிளவியும் க த நபம எனும் அவற்றோ ரற்றே, அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே' என்று இசைத்து, எளிதாகவும் இயற்கை யாகவும் தொடர் முடிபுகொள்வதைக் காண்க.

இனி, 'அஐ ஔ எனும்' என்னும் பாடத்தினும், 'அவைஒள என்னும்’ என்னும் பாடம் எதுகைக்கும் ஒழுகிசைக்கும் ஏற்றதாயிருத்தலையும் நோக்குக.

ஆகவே, சகரமுதற் சொல்லும் தொன்றுதொட்ட தமிழ் வழக்கே யென்றும், அதுவும் இன்றியமையாத பெருவழக்கென்றும், அறிந்து கொள்க. 4. தமிழின் தொன்மை

நிலநூலியல் ஊழிகள் (Geological Eras)

1. தொடக்க நிலையுயிர் ஊழி (Archezoic Era)

2.

3.

4.

முந்துநிலையுயிர் ஊழி (Proteroxoic Era)

பண்டைநிலையுயிர் ஊழி (Paleozoic Era - Primary Period)

டைநிலையுயிர் ஊழி (Mezozoic Era - Secondary Period)

5. அண்மை நிலையுயிர் ஊழி (Cainozoic Era)

அண்மை நிலையுயிர் ஊழிப் பிரிவுகள்

1. மூன்றாம் மண்டலம் (Tertiary Period)

(1) விடியண்மை (Eocene)

(2) சில்லண்மை (Miocene) (3) பல்லண்மை (Pliocene)