உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

41

டன்ன கணைதுஞ்சு விலங்கல்” என்னும்

ம்

"நாடுகண் பதிற்றுப்பத்துத் தொடருக்கு (16:2) "நெடு நாட்பட அடைமதிற் பட்ட "நெடுநாட்ப காலத்தே விளைத்துக் கோடற்கு, வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்தமையாற் கண்டார்க்கு நாடு கண்டாற்போன்ற.... இடைமதில்” என்ற அந் நூலின் பழையவுரையாசிரியர் விளக்க வுரை கூறியிருப்பது, இங்கே கவனிக்கத் தக்கது.

காலில் திரியெறிதல், உழிஞையார் (அதாவது முற்றுகையிட் டிருப்பவர்) நகரத்துள் எறியும் எரிவாணத்தைக் குறிக்கலாம்.இப்போது வேடிக்கைக்காக விடப்படும் எ ரிவ வாணம் (வாணக் கட்டு) பழங்காலத்தில் நொச்சி நகருள் எரியூட்டுவதற்கு விடப்பட்டதாகத் தெரிகின்றது.

விளையாட்டிற் காணங் கட்டியபின் குதிரையேறுவது, நொச்சி மறவர் காணம் விளைத்துத் தம் குதிரைகட்கு வைத்த பின், அவற்றின் மேலேறி நகருக்கு வெளியே போருக்குப் புறப்பட்டு வருவதைக் குறிக்கலாம்.

ஆட்டின்பயன் : காலால் ஒரு பொருளைப் பற்றுவதும் கரணம்போட்டுத் தாண்டுவதுமாகிய வினைப்பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும்.