உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?

109

குமரன் - குமார = குழந்தை, பையன், குழந்தை, பையன், இளைஞன், மகன் ( இருக்குவேதம்) குமரி குமாரீ - சிறுமி. பத்திலிருந்து பன்னீரகவைப்பட்டவள். இளைஞை, மகள் (அதர்வவேதம்).

-

இவ் விருசொற்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டுமாறு, மூலத்தையும் கீழ்வருமாறு திரித்துள்ளனர்.

666

கு + மார = எளிதாக இறப்பது.

இப் பகுப்பும் சொற்பொருட் கரணியமும் இயற்கைக்கு மாறாகவும் உத்திக்குப் பொருந்தாமலும் இருப்பதையும், மகன் மகள் என்னும் பொருள் தமிழிலின்மையையும் நோக்குக. இன்றும், இந்தச் சுமையைத் தூக்க முடியாத நீ ஒரு குமரனா?” என்று ஓர் இளைஞனை நோக்கி மக்கள் வினவுவதையும், “கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை, குமரிப் பெண்ணுக்கு ஒரு பிள்ளை என்னும் பழமொழி வழக்கையும், ஊன்றி நோக்கி உண்மையை அறிக.

குமரன் குமரி என்னும் சொற்களை வடசொல்லென்று நீக்கிவிடின், வடமொழியாளர் கூற்றை ஒத்துக்கொண்டதாகவும் குமரிமலை மூழ்கியது ஆரிய வருகைக்குப் பிற்பட்டதாகவுமே முடிதல் காண்க.

திரு என்னும் சொல்லின் பல பொருள்களுள் தெய்வத் தன்மை என்பதும் ஒன்று.

எ-

-டு: திருக் கண்ணப்பர், திருக்குறள், திருவரங்கம், திருவிழா, திருநீறு, திருமணம் முதலிய சொற்களில் திரு' என்பது தெய்வத்தன்மைக் கருத்தோடு தூய்மைக் கருத்தையும் உணர்த்தும். மதிப்பான மக்கட்டன்மையைக் குறிக்கும் திருவாளன் என்னும் அடைச்சொல், திரு. என்று குறுகிநிற்கும்போது முற்றுப் புள்ளி பெற வேண்டும். அல்லாக்கால், தெய்வத்தன்மையுணர்த்தும் திரு என்னும் சொல்லோ டொப்பக்கொண்டு மயங்க நேரும். எ-டு

-டு : திருநாவுக்கரசு (இறையடியார் பெயர்)

திரு. நாவுக்கரசு (பொதுமகன் பெயர்)

இறையடியார் பெயரே, பொதுமகன் பெயராயின் அப்படியே யிருக்கலாம். புள்ளி வேண்டியதில்லை. துறவியார் பெயருக்கு முன் தவத்திரு என்பதையும், தமிழ்த் தொண்டர் பெயருக்கு முன் தமிழ்த்திரு என்பதையும், மறையொழுக்கத்தினர் பெயருக்கு முன் மறைத்திரு என்பதையும், அடைச்சொல்லாக,ஆளலாம்.

எ-டு :

தவத்திருக் குன்றக்குடியடிகள்

தமிழ்த்திரு மறைமலையடிகள்

மறைத்திரு மணியம் அவர்கள்