உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

பாரிலுள் ளோர்செய்த பாவங்கள் யாவுமே பாரமாக எய்தப் பாரித்த வேதமே

ஆகார முண்ணாமல் ஆவி யொடுங்கவும் தேகமோ புண்களால் தேங்கி நடுங்கவும் நித்திரை யில்லாமல் நியாயம் விசாரித்துக் கட்டியே கண்களும் காந்தி யெரிவுற்று வையமெய் பேயுடன் வாகைமல் லாடியே கையயர்ந்து பின்னே கால்கள்தள் ளாடியே

கேடுகெட் டபவக் கேளைத் தழுவுறப் பாடுபட் டேவரும் பாரச் சிலுவையைத்

தாங்க முடியாமல் தஞ்சமே வீழவும்

ஆங்கொரு சீமோனை அன்றினர் ஆளவும்

கல்வாரி மாமலை கண்டு சமீபமே

கொல்வாரே கோதில்லாக் குன்றைஎன் பாவமே.

செந்தமிழ்க் காஞ்சி

31

ஏசுவைச் சிலுவையி லறைந்தது 'திருவுற்றிலகு கங்கை' என்ற மெட்டு

அமரச் சேவகரேசு குமரக் கடவுளானை அறையச் சிலுவை யோடு சென்றனர் - அந்தப் பொறையைச் சீமனதாகு மென்றனர் - களி ஆடு கூளிகள் பல்கிமேவுக

பால மேநிறை கொல்கதாவிடம்

அடையக் கசந்த கள்ளைத் தந்தனர் கொள்ளப் பரமற் கிருந்ததில்லை சிந்தையே குருசிற்பெரிய வாணி யுருவப் பரமனேசு

குருவைக் கையொடு காலறைந்தனர் – அவர் உடையைப் பகிரவே விரைந்தனர் – அந்தக்

கோதி லாத குமரனை யன்றிவர்

யூத காவல னென வரைந்ததைக்