உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இசையரங்கு இன்னிசைக் கோவை

7

நாளுங் கோளுங் கற்றவனாம் நாவல் முற்றும் உற்றவனாம் ஏழு நிலத்தும் விற்றவனாம் எல்லை யில்பொருள் பெற்றவனாம்

8

அறுவை முதலில் நெய்தானாம் அறுசுவை யுண்டி செய்தானாம் அறுவகைச் செய்யுள் செய்தானாம் ஆயிரம் விளைநன் செய்தானாம்

41

(தமிழா)

9

நானில மெங்குந் தென்னாடு நல்கிய தேயகக் கண்ணோடு நாகரி கம்நற் பண்பாடு நாள்தொறும் நன்றாய்ப் பண்பாடு

5. திருவள்ளுவர் திருத்தொண்டு

பண்

-

பந்துவராளி

ப.

(தமிழா)

(தமிழா)

தாளம்

முன்னை

தென்னாட ருய்யவந்த திருவள்ளுவர்

தெரிந்துமெய்ப் பொருளெல்லாந் திடங்கொள்ளுவர்

து. ப.

பன்னாடரும் இன்புறும்படி யுள்ளுவர் - அதன் பாங்காகப் பொதுமறைப் பயன்தெள்ளுவர்

(தென்)

உ. 1

மண்ணோ ரெல்லாரும் ஒரேவகை பிறந்தார் - அவர்

பண்ணா ருயர்வினையாற் பதஞ்சிறந்தார்

தண்ணா ரருளினார் அந்தணர் துறந்தார்

- என்று

கண்ணாரத் தமிழனின் கண்திறந்தார்

(தென்)

2

ஒழுக்க முடைமையாகும் உயர்குலமே - என்றும்

ஓதும் வேதத்தா லில்லை ஒருநலமே

இழுக்க முடையானெனின் இழிகுலமே

ஏதுகொண் டெதிர்க்கவே இடமிலமே

என்றார்

(தென்)