இசையரங்கு இன்னிசைக் கோவை
7
நாளுங் கோளுங் கற்றவனாம் நாவல் முற்றும் உற்றவனாம் ஏழு நிலத்தும் விற்றவனாம் எல்லை யில்பொருள் பெற்றவனாம்
8
அறுவை முதலில் நெய்தானாம் அறுசுவை யுண்டி செய்தானாம் அறுவகைச் செய்யுள் செய்தானாம் ஆயிரம் விளைநன் செய்தானாம்
41
(தமிழா)
9
நானில மெங்குந் தென்னாடு நல்கிய தேயகக் கண்ணோடு நாகரி கம்நற் பண்பாடு நாள்தொறும் நன்றாய்ப் பண்பாடு
5. திருவள்ளுவர் திருத்தொண்டு
பண்
-
பந்துவராளி
ப.
(தமிழா)
(தமிழா)
தாளம்
முன்னை
தென்னாட ருய்யவந்த திருவள்ளுவர்
தெரிந்துமெய்ப் பொருளெல்லாந் திடங்கொள்ளுவர்
து. ப.
பன்னாடரும் இன்புறும்படி யுள்ளுவர் - அதன் பாங்காகப் பொதுமறைப் பயன்தெள்ளுவர்
(தென்)
உ. 1
மண்ணோ ரெல்லாரும் ஒரேவகை பிறந்தார் - அவர்
பண்ணா ருயர்வினையாற் பதஞ்சிறந்தார்
தண்ணா ரருளினார் அந்தணர் துறந்தார்
- என்று
கண்ணாரத் தமிழனின் கண்திறந்தார்
(தென்)
2
ஒழுக்க முடைமையாகும் உயர்குலமே - என்றும்
ஓதும் வேதத்தா லில்லை ஒருநலமே
இழுக்க முடையானெனின் இழிகுலமே
ஏதுகொண் டெதிர்க்கவே இடமிலமே
என்றார்
(தென்)