42
செந்தமிழ்க் காஞ்சி
3
உழுவா ருலகத்திற்கே ஆணியென்பார் ஒருவரையுந் தொழாத உயர்ந்த பண்பார்
அவர்
வழுவாது முறைசெய்யக் காவலன்பார் - இன்றேல் வசிட்டனும் மறையோத வழியில் என்பார்
6. திருக்குறள் படித்தல்
பண்
-
முல்லை (மோகனம்)
ப.
(தென்)
தாளம் - முன்னை
திருக்குறள் படித்தல் வேண்டும் - தென்னோரே யாண்டும்
து.ப.
இருக்கிற பகல்தொறும் இரண்டொரு குறள்களே
இசையினும் தெளிபொருள் இலகுற மீண்டும் மீண்டும்
2.1
பிறப்பினிற் சிறப்பில்லை பெருமையுஞ் சிறுமையும்
பேணுந் தொழிலொழுக்கம் பெற்றியாலே விளைக்கும் இறப்புவரை தமிழன் இழிவுற வகுத்தின்றும்
ஏமாற்றும் ஆரியனை ஈமேற்றவே முளைக்கும்
2
இல்லறம் நல்லறமாய் இயற்றித்தம் வாழ்நாளெல்லாம் இன்ப மைந்தும் ஒருங்கே இனிது நுகர்ந்து நன்றே தொல்லுல காண்ட சேரசோழ பாண்டியர் வழி தோன்றிய தமிழரே துரைத்தனஞ் செய்ய இன்றே
3
(திருக்)
(திருக்)
(திருக்)
ஆயிரத்து முந்நூற்று முப்பதருங் குறளும்
பாயிரத்தோடு நன்றாய்ப் படித்தபின்னே யொருக்கப்
போயொருத்தர் வாய்க்கேட்கப் புதிய பொருளுமுண்டோ
வாயறப் பலரையும் வணக்கிய வீற்றிருக்க(த்)
(திருக்)