உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இசைத்தமிழ்க் கலம்பகம்

2.1

வானவர் மொழியென வரும்வட மொழியே வாய்ந்தது தமிழினால் வலந்திரிந் துழியே ஏனுயர் தமிழனும் இழிவுறும் பழியே

எய்தினன் இனியேனும் ஏமாறல் ஒழியே

2

முந்தியே பெறுவது மொழிதரும் பேரே முன்கையே தோளினும் முன்னுறும் பாரே இந்தியன் எனும்பெயர் இரண்டாவ தோரே இதன்பின்னே ஆசியன் என்பது நேரே

3

பார்முதல் பண்பாடு பயின்றவன் தமிழன்

பலரையும் உறவெனப் பகர்ந்தவன் தமிழன்

ஊரெலாம் சொந்தமாய் உள்ளினான் தமிழன்

(நானொரு)

(நானொரு)

ஒருவனே தேவன்என் றுணர்ந்தவன் தமிழன் (நானொரு) 97. ஆங்கில ஆரியப் பண்பாடு வேற்றுமை 'ஆரியோகே ஓய்' என்ற மெட்டு

1

தாழ்ந்தவன் உயர்ந்ததே ஆங்கி லத்தினால் - அவன் தலைவருக் குணவிட்டான் தங்கமே தங்கம் உயர்ந்தவன் தாழ்ந்ததோ ஆரி யத்தினால் – அவன் உணவமைத்தல் இழந்தான் தங்கமே தங்கம்.

2

உடலைப் பிணித்ததுவே ஆங்கில வாட்சி - அதும் ஒழிந்துபோய் விட்டதுகாண் தங்கமே தங்கம் உளத்தைப் பிணித்ததுகீழ் ஆரிய வாட்சி - அது உள்ளரித்துக் கொண்டிருக்கும் தங்கமே தங்கம்.

3

நடுநிலைத் தண்டனைதான் ஆங்கிலத் தீர்ப்பு அது நாயனாரின் தமிழ்முறை தங்கமே தங்கம் குடிநிலைத் தண்டனைகீழ் ஆரியத் தீர்ப்பு – அது கொடிய மனுமுறையே தங்கமே தங்கம்.