உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இசைத்தமிழ்க் கலம்பகம்

107. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின்

சீர்கேடு

'நன்றுடையானை' என்ற மெட்டு

பண் குறிஞ்சி

1

தாளம்

இணையொற்று

பற்றொன்று மில்லாப் பற்பலர் கூடிப் பலவாறு

குற்றங்கள் மல்கக் கொச்சை வெஞ்சொல்லும் இனமல்லா மற்றும் பல்வேறும் மட்டின்றிக்கொண்டு தூய்மையைச் செற்றது சென்னைத் தமிழகராதி சிறப்பின்றே.

2

பக்கம் ஒவ்வொன்றும் பல்பிழை சேரப் பொதுவாகும் மக்கள் பணம்மே மாதொகை வீணிற் செலவிட்டு மிக்கதென் சொல்லை வடசொல்லாய்க் காட்டி மிடியுறத் தொக்கது சென்னைத் தமிழகராதி துணிவென்னே.

3

ஆண்டுகால் நூறும் ஆகியும் பல்தென் சொல்லின்றித் தூண்டியும் நன்று தொகுக்காது சொல்லின் பொருளும்மே வேண்டிய வாறே வேறாகக் கூறி மயல்கொள்ள ஈண்டிய சென்னைத் தமிழகராதி இழிவன்றோ.

4

ஆங்கிலம் முன்னும் அருந்தமிழ் பின்னும் அகராதி தேங்கிய தீங்கு தெளிவாகக் காட்டும் திறனாய்வு பாங்காய் விடுத்தும் பல்கலை மன்றம் பார்க்காதே தூங்கிய சென்னைத் தமிழகராதி தொடரும்மே.

5

புலவர்க்குங் கற்ற பொதுமக்கட் கும்ஆங்கிலக் கல்வி வலவர்க்குங் கட்சித் தலைவர்க்குங் கல்வி யமைச்சர்க்கும் பலவர்க்கும் ஈது தெரிவித்தும் இன்னும் பல்லாண்டு

செலவுயக்குஞ் சென்னைத் தமிழகராதி திருந்தாதே.