இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
118
இசைத்தமிழ்க் கலம்பகம்
136. தமிழைத் தமிழனே தாழ்த்துதல் உன்னைக் கண்டு மயங்காத' என்ற மெட்டு
ப.
தமிழ்நாடுபோற் கேடுகொள் நாடுமுண்டோ.
உ.1
தன்சொலைத் தாழ்வெனத் தள்ளியே வடசொல் விண்சொலென வியந்து விரும்பியுற.
2
உடைய மதம்தமிழ் உரிமையா யிருக்க வடமொழி தனிலே வழிபடவே.
3
சிற்றடி மைத்தனம் செற்றுரி மையென
முற்றடி மைத்தனம் பெற்றிடவே.
(தமிழ்)
(தமிழ்)
(தமிழ்)
137. தமிழர் பேதைமை
'மார்கழி மாதம் திருவாதிரை நாள்' என்ற மெட்டு
1
வீட்டவர் இளைக்கவும் வேற்றவர் கொழுக்கவே
வேளாண்மை செய்வார்
கோட்டியர் போலத்தம் குடும்பத்தைக் கொன்றிடும் கோளாறே மெய்பார்.
2
நாட்டவர் பசியினால் நைந்தெதிர் நிற்கவும்
நண்ணி வேற்றவரைக்
கூட்டிவந் தவரடி கும்பிட்டு வீழ்ந்துபின்
கொடுப்பார் கேட்டவரை.
3
விருதுநகர் செல்லும் வினையதை என்னது
வீடுவரை யின்றே
வருகவென் றதுபோல வம்பலரை வேந்தர் வரவழைத்தார் பண்டே.