உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

4

தன்மையும் தனிமையும் தலைமையும் தழுவிய தாய்மொழியைத் தள்ளிப்

புன்மையும் புதுமையும் புரைமையும் புணர்மொழிப் போலியை மேற்கொள்வார்.

5

முழுமுதற் கடவுளை வழிபடும் விழுமிய

முதுபழ மதமிருக்க

வழுவிய கருத்தினாற் கெழுமிய சிறுதெய்வத் தொழுகையே புரிந்திடுவார்.

138. பிராமணியம்

‘பச்சைமலை பவழமலை' என்ற மெட்டு

1

ஆரியம்பி ராமணியம் ஆயிரண்டும் ஒன்றே சாரும்ஒரு சார்தமிழர் சார்புகொண்டு நின்றே.

2

ஆரியப்பி ராமணரும் அவர்வழியி னோரும் பாரிலுள்ள தேவரெனல் பிராமணியம் பாரும்.

3

ஆரியப்பி ராமணரைத் தேவரென்ற தானே அவர்மொழியும் தேவமொழி யாயினது தானே.

4

அறுப்பவனை நம்புகின்ற ஆடுபோன்ற தமிழர் திருக்குறளை நம்பாது திறனிழந்தார் திமிறி.

5

பல்வேள்விச் சாலைமுது குடுமிப்பெரு வழுதி

வல்லோசை வடமொழியை வளர்த்துவிட்டான் வழுவி.

119