உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இசைத்தமிழ்க் கலம்பகம்

146. போலிக் குடியரசு

'பாலாபிடேகப் பழனி மலையப்பன்' என்ற மெட்டு

ப.

ஆங்கில ஆட்சியே நீங்கினதும் இன்பம்

அடையவில்லை நாமென்றறிந்தே அந்நாள் காங்கிர சென்னும்பேர் ஓங்கு பேராயத்தைக் கலைத்துவிடக் காந்தியடிகள் சொன்னார்.

(உரைப்பாட்டு)

ஏராளமான பணி இந்திய வறுமையைப் போக்குதற் கிருக்கவே வேறான செய்திகளில் வீணாகப் பெருந்தொகை வீசியே

ப. எடுப்பு

இந்திய விடுதலை யென்பதெல்லாம் வட

இறைக்கின்றார்

இந்தியைப் பொதுமொழி யாக்குவதே இந்திய வொருமைப்பா டென்பதெல்லாம் மெல்ல எந்தமிழை யிங்கே நீக்குவதே

(உரைப்பாட்டு)

அறியாமையோடு குலப்பிரிவினை யென்னும் பேய்

அலைத்துவரும் மக்களைப்

பெருவாரியாய்க் கொண்டு பெயருக்குக் குடியரசு பேணிவருதல்

வெட்கமே.

(ஆங்.)

147. ஆரியத்தை வளர்த்துத் தமிழைத் தளர்த்தல்

பண்

(வசந்தா)

ப.

இந்திய விடுதலை இதுதானோ

முந்தி யாரியம் வளர்ப்பதும் ஏனோ

உ.1

இந்தியைப் பொதுமொழி யென்றாக்கிப் - பின்னே

எழிற்கலை யாங்கிலந்தனைத் தாக்கி

தாளம் - முன்னை