உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இசைத்தமிழ்க் கலம்பகம்

187. இந்தி வடமொழியால் தேயவொற்றுமைக்

கிடமின்மை

1

பேசுமொழி யொன்றெனவே ஆகி விடினே - உடனே - பேசுமிடம் ஒற்றுமையாய்ப் போய்விடு மென்பார் நேசமாகப் பன்மொழியார் பாரில் இல்லையோ – போரும் நேரிடத்தொரே மொழியார் மாய்வதில்லை யோ.

2

அதைக்

கேழ்வரகில் நெய்யொழுகும் என்று கிளந்தால் கேட்பவர்க்குக் கொஞ்சமேனும் மதியில்லையா வாழ்வரசில் ஒற்றுமைக்கு வடமொழியோ எரி வன்னெருப்பை அணைத்தற்கு எண்ணெய் வழியோ

3

ஆரியத்தால் வந்ததமிழ்க் கேடுகளையே - அளவிட்டுச் சொல்ல எவராலே முடியும் சேரிடத்தைத் தானறிந்து செம்மையுறாமல் சிறுமையுற்றோம் இதென்று தீரவிடியும்.

4

இன்று

ஒற்றுமையே உரமென்ப துண்மையா னாலும் ஒரேயளவாக எல்லாம் ஒன்றுபடுமோ பெற்றவயி றொன்றில்உடன் பிறந்தவரும் பிரிகின்றாரே மணத்தின் பின்னர் இடமே.

5

நாம்

எங்கும்

வேறு

தாயும் பிள்ளையுமானாலும் தன்னலத்திலே -அவர் வாயும் வயிறும் வேறென்று தாம்அறையுமே தேயமதிலுள்ள பற்றுத் தேயுமென்றாலும் - என்றும் தாய்மொழியிலுள்ள பற்றுத்தான் குறையுமோ

6

மேலும்

வலியச் சண்டையிடுதல் வகை கெட்டது வந்த சண்டை விடுவதும் வகை கெட்டது நலியத்தான் வரும் இந்தி நாகரியையே - இந்த நாட்டை விட்டுத் துரத்துதல் நன்மையுற்றதே.