உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இசைத்தமிழ்க் கலம்பகம்

விரும்பாத நிலையினில் வேற்றுமொழி யாளர்மேல்

விரகுநெறிகள் பல விரிவாகக் கையாண்டு இரும்பான மனத்துடன் எத்துணை யெதிர்ப்பையும்

எதும்பொருட் படுத்தாமே இறுகும்வகை யீண்டு (பெரும்)

190. தமிழமாணவர்க்கு மும்மொழிக் கல்வி தகாமை

பண் - (நாதநாமக்கிரியை)

தாளம் - உருவகம்

'பித்தா பிறைசூடீ' என்ற வண்ணத்திற் பாடுக.

1

பாரே யுயர் மேலையவர் பலவாயின் கட்டாயம் சீராயொரே யினமாமொழி செம்மை யுறக்கற்பார் நீரோடு நெய்யிதளே நிகராகத் தமிழ் நாட்டில் சேராத மும்மொழி கற்கவே செய்தல் நலமாமோ?

2

குடும்பின் வழிதொடர்ந்தே குலத்தொழிலாய்ப் பயின்றாலும் வடுவின்றியே கற்கப் பொது வலிமை இருமொழிக்கே நெடுங்கால மாயுயர் கல்வியை நீத்த தமிழ் நாட்டில் திடுமென்று மும்மொழி கற்கவே தெரித்தல் நலமாமோ?

3

பனிமா மழையல்லா நிலை பகல்போல நள்ளிரவும் சுனையே குளித்தெழுந்தாலும் பின் சோரு முடல் புழுங்கக் ரு கனலாய் வருங்கதிரோன் சினங்கடுகுந் தமிழ்நாட்டில் வினையாக மும்மொழி கற்கவே விளைத்தல் நலமாமோ?

4

குறிதாகிய வாழ்நாள் பினுங் குறுகிவரும் நாளில் அறிவாகிய துறையே பல அறிதல் மிக அறிவாம் சிறிதாயினும் இந்திமொழி செல்லாத் தமிழ் நாட்டில் வறிதாக மும்மொழி கற்கவே வகுத்தல் நலமாமோ?