இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
202. தமிழ்க்காப்புப் படை
'வந்தேன் வரம் பெறவே நானே' என்ற மெட்டு
1
இந்தியை எதிர்த்துவந்தோம் நீண்டும் எத்தியே புகுத்துகின்றார் மீண்டும் செந்தமிழைக் காக்கும்படை வேண்டும் செம்மையுடன் நின்றுபொர யாண்டும்
2
செந்தமிழ்த்தென் நாட்டிற்கிந்தி ஏனோ
சென்றநா ளெதிர்ப்பெலாம் வீண்தானோ இந்தியாளன் எம்மனோர்க்குங் கோனோ இந்த வாழ்வும் இன்பம்நீடு வானோ.
3
ஆரியம் தமிழ்இடை சொற்போரே ஆண்டுகள் மூவாயிரம்என் பாரே
சீரிய தலைபோங் காலம் நேரே
செந்தமிழ்க்கும் வந்ததுதீர்ப் பீரே.
4
நூற்றில் எண்பதின்மர் கல்வி யில்லார் நாட்டின் வரலாறறிய கில்லார் வேற்றுமை யில்லாதவாறே எல்லார்
வீட்டிலும் புகுந்துசொல்க வல்லார்.
5
தமிழ் அரத்தம் ஓடுவார்எல் லாரும்
தண்டிலே முன்னாகவந்து சேரும்
இமிழ்திரைக் கடல்கடந்து நேரும் எங்குமே தமிழ்முழக்கி ஆரும்
171