உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இசைத்தமிழ்க் கலம்பகம்

203. தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல்

கழுகுமலை குருவிகுளம்" என்ற மெட்டு வகை

ப.

இந்தியை ஏன்கற்க வேண்டும்

என்அம்மா என்அப்பா நான்

2.1

(இந்தி)

என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே

2

(இந்தி)

அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும்

வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத

(இந்தி)

3

அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார் உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து

4

வரவரவே வாழுநாள் வரம்புகுன்றி வருகையில் அறிவியற்கே நிறைவிலா அரியகாலம் பயனறவே

(இந்தி)

(இந்தி)

5

ஆரியத்தால் செந்தமிழ் அடைந்ததுபல் கேடுகள் சீரியநல் எச்சமும் சிதையும்வகை மதியிலாது

6

இந்தி யில்லாப் பள்ளியே இந்தநாட்டில் இல்லையேல் அந்த நாள் வரும்வரை அகத்திருந்தே கற்றிடுவேன்

7

மானமும்தன் மானமும் மருவுதமிழ் மாணவர்

(இந்தி)

(இந்தி)

தானையிலே சேர்ந்துநான் தண்டமிழைக் காத்திடுவேன் (இந்தி)