உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இசைத்தமிழ்க் கலம்பகம்

2

உண்மை நடுநிலை அன்பிவை மட்டும்

உள்ளவை யேஉண்மை யானநற் சட்டம் வன்மை நடுநிலை யின்மைபொய் முற்றும்

வந்தவை கொள்ளைக்கே வலைவீசும் திட்டம்.

3

செந்தமிழ் வடவர்தாம் தெரிந்திலர் சற்றும் சென்றவ ருந்தமிழ் கண்டிலர் கற்றும் இந்தியோ டாங்கிலம் எண்சமம் உற்றும் இந்தியார் தலைமையால் இட்டதே சட்டம்.

4

வழுவாத மாந்தரே மாநிலத் துண்டோ

வழுவைத் திருத்தலே வாகான தொன்றே

பழுதான சட்டத்தைப் பாதுகாப் பின்றே

பழுதையை வெள்ளத்திற் பற்றுதல் அன்றோ.

5

பன்னாடு கொண்டது பாரும்இத் தேயம் படியாத மாபெரும் பான்மையர் தாயம் எந்நாளும் ஆளவே எண்ணும்பே ராயம்

இறைவனென் றொருவனும் இருப்பதை ஆயும்.

228. தமிழர் மாகழகம்

'செய செய பாரததேவீ கண் பாராய்' என்ற மெட்டு

ப.

உண்மைத்தமிழர் இன்றே ஒன்றாகச் சேரும் ஓங்கும் தமிழ்க் கழக உறுப்பாயெல்லாரும்.

உ.1

வண்மெய்த் தமிழ்அழிய வரும்இந்தி பாரும் வாளா இருப்பின்அது வாளாகித் தீரும்.

(உண்மை)