216
இசைத்தமிழ்க் கலம்பகம்
258. எண்கோள் கூடல்
குரும்பைநிகர் மென்முலையாள்' என்ற மெட்டு
பண் - காம்போதி
1
தாளம்
முன்னை
பலதிசையும் பெரும்பான் மக்கள் பஞ்சையரா யிறத்தல் கண்டும் அலகறும்பொற் செலவிற் செய்யும் அணுக்குண்டுப் பயிற்சி நாளில் இலகுறுகோள் எட்டுஞ் சேர எய்திநின்ற குறிப்பை நோக்கின் உலகமெல்லாம் ஓரரசாய் ஒன்றுகவே என்ப போலும்.
2
விண்ணிடத்தின் அன்றமையும் விரிநீரும் நஞ்சமாகப் பண்ணுமழி படைப்பயிற்சி பலர்தடுத்துந் தொடரு நாளில் எண்ணுறுகோள் இறும்பூதாக எய்திநின்ற குறிப்பை நோக்கின் மண்ணகமே ஓரரசாய் மன்னுகவே என்ப போலும்.
3
போரெனவே யிருவன்னாடு போட்டியிட்டுப் பின்பின்னேவ ஏரவுயர் பெருங்கலங்கள் இயங்குகின்ற பரவெளியில்
சீ ருடைய கோள்களெட்டும் செறிந்துநின்ற குறிப்பை நோக்கின் பாரனைத்தும் ஓரரசாய்ப் பண்படுக என்பபோலும்.
4
ஈனுலகில் எறும்புதேனீ இன்னலமாய் மன்னிவாழ
மானமிகச் செருக்குமாந்தர் மாளமுரண் மூளுநாளில்
வானகமெண் கோள்கள்சேர வந்துநின்ற குறிப்பை நோக்கின் மாநிலமே ஓரரசாய் மருவுகவே என்ப போலும்.
5
பெருவெள்ளமும் கடுங்குளிரும் பிதிர்மலையும் நிலநடுக்கும் உருமிகவிந் நிலமீதெங்கும் உண்டாக வியன்மா வானில் ஒருகுலம்போல் இருநால்கோளும் ஒருங்குநின்ற குறிப்பை
இருநிலமே ஓரரசாய் இணைந்திடுக என்ப போலும்.
நோக்கின்