உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

3

ஈக்களின் எச்சிலும் இனியசெந் தேனாம் எறும்புறும் பதனீரும் ஏற்றது தானாம் மாக்களில் நாயும்வாய் மடுத்தது தீனாம்

இசைத்தமிழ்க் கலம்பகம்

மாந்தனின் கைபடின் மறுப்பதும் ஏனாம் 4

(செருக்)

ஆவிடு சாணமும் அணிமனை மெழுக்கு

அதன்சிறு நீருமே அரிவையர் விழுக்கு கோவிலில் தெய்வமும் கோவைந்து முழுக்கு

குலவனின் வியர்வையும் குலவறும் அழுக்கு

(செருக்)

5

நன்றியறி வுடைமை நாயில் அமைத்தான்

நல்லொழுங் கைஅணி செல்லெறும் புய்த்தான்

கன்றிய மானமும் கவரியில் வைத்தான்

கரைந்துற வாடலைக் காக்கையில் தைத்தான்

(செருக்)

276. பொங்கல்

திருப்பரங்கிரிவாசா' என்ற மெட்டு

ப.

தமிழனுக் கொருதிருநாள்

பெருந்

தைப்பொங்கல் என வருநாள்.

9.1

அமுதமும் புதிரியும் அடுகலம் பொங்கும் அழகிய கோலங்கள் அறிவொடு தங்கும் கமுகமும் வாழையும் கன்னலும் தெங்கும் காய்தரு நெல்லொடு காண்வரும் எங்கும்

2

மங்கையர் கூந்தலில் மலரும்பே ரரும்பு

மகிழுறு சிறுமகார் வாயெல்லாம் கரும்பு பொங்கலிற் பலவகை பொலிந்திடும் பரும்பு

புலவர்செந் தமிழ்செவிப் புலனுற விரும்பு

(தமிழனுக்)

(தமிழனுக்)