ஞா. தேவநேயப் பாவாணர்
3
கண்டகம் நிறைந்திடக் கறவைகள் கறக்கும் கண்ணுப்பீ ளைவேம்பு கருதவே சிறக்கும் மண்டுறு பசியென வழங்குசொல் மறக்கும் மருவுதை பிறந்திடின் வழியது திறக்கும்
4
முல்லையில் மதமிக முழங்கும்கொல் லேறு முதுகுடி மறவரும் முன்னுவர் வீறு தொல்லைநல் வழக்கமே துணையுறு பேறு தூய தமிழர்விழா துணிந்திது கூறு
5
இரப்பவர் அரையிலும் இருக்கும்புத் தாடை எழிலுறு கணிகையர் ஏறுவர் மேடை
பரப்பியே வரும்வளி பசுமஞ்சள் வாடை
பரிந்தெடு நோன்புநூல் படிமையின் சாடை
277. எறும்பின் ஏற்றம்
229
(தமிழனுக்)
(தமிழனுக்)
(தமிழனுக்)
'இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம்' என்ற மெட்டு
சிற்றுயி ரானநற் சிற்றெறும்பே
1
செவியுங்கண் ணும்உனக் கில்லையென்பார்
கற்றது நீஎந்தக் கல்லூரியில்
கலைஞரும் நாணியே தலைவணங்க.
ஒற்றரை முன்னுற உய்த்தறிந்து
2
ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்துசென்று
உற்ற பொருள்கொள்ள ஒற்றுமையாய் ஒத்துழைக் கும்மிக உன்இனமே.
3
மாரிநாட்கு முன்னே சேர்த்துவைத்து மற்றதை அன்றன்று வாய்மடுத்து பேரும் பெரும்பொருள் சேரத்தள்ளும்
பெருந்திறல் உன்இனம் பெற்றுள்ளதே.