10
இசைத்தமிழ்க் கலம்பகம்
4
திண்ணியோர் காதல்மறம் நின்ற தமிழே
தெரிந்ததிரு முனிவருளம் நடந்த தமிழே நண்ணிலத்தில் நன்றே நண்ணுகடல் நின்றே
எண்ணியிங்கே வந்தையென இயம்புபவர் உண்டே
5
பாண்டியன் கழகம் மகிழ்ந்தோடு தமிழே
பாணரது வாயிலே பண்பாடு தமிழே பிரித்தானியம் நின்றே பெயர்ந்து வந்தாய் என்றே பொருத்தமின்றி யுண்மையெனப் புகன்றவரும் உண்டே
6
தாண்டியே கூத்தர்வயின் ஆடு தமிழே
தலைக்கழகம் முழுவளர்ச்சி யடைந்த தமிழே இருண்டகண்டம் நின்றே இங்குவந்தாய் என்றே தெருண்டறியார் தம்மனத்தின் திரிபுரைத்தார் இன்றே.
7
பலதிசை சென்றுமிகத் திரிந்த தமிழே
பற்பலவாம் சேய்களையும் பெற்ற தமிழே
பலதிசையி னின்றே பற்பலகால் வந்தே
கலவிநின்றா யென்றுரைக்குங் கரியகண்டர் உண்டே
8
என்றுமே இளமைநிலை கொண்ட தமிழே
உ
இறைவனெனப் பலமொழிப்பின் எஞ்சுந் தமிழே
உலகமெல்லாம் இன்றே ஒன்றுசேர நன்றே
உறுதுணைசெய் உன்முதிய உறவுகொண்டு நின்றே.