உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

49. தமிழ்நாடு வரவரத் தேய்ந்தமை

நானிருப்ப தேழடுக்கு மாடி' என்ற மெட்டு

1

நாவலம் எல்லாம்முன் தமிழ்நாடு

அதில்

நண்ணியது செந்தமிழ்ப் பண்பாடு

மூவரான வேந்தர் முடியொடு அதை

முன்னர்ஆண்டு வந்தனரே நீடு

2

(நாவலம்)

தென்குமரி மலைமுது பாண்டி நிலம்

திரைகடல் புகுந்தது காண்டி

செந்தமிழ் நிலத்தின்எல்லை தாண்டி மிகச்

சிறுகிவந்த தேதேரை தீண்டி

(நாவலம்)

3

ஆரியம் வந்துபுகுந்த அன்றே - விந்தம்

அடைந்தது வடவெல்லை யென்றே

சீரிய தமிழ்திரிந்த பின்றே வடம்

செப்பின எல்லை வேங்கடக் குன்றே

(நாவலம்)

4

கழகத்தின் பின்னேகரு நடமும் - மெல்லக் கரைந்துவந்த கொங்குநாட் டிடமும்

அழகிற் சிறந்தசேரன் குடமும் ஆகும்

அரையாரி யத்தென்திர விடமும்

5

இன்றுதமிழ் நாட்டுவடம் சென்னை - அதும்

எதிர்ப்பு மிகுந்ததிடை யென்னை

முன்று தமிழ்ப்பேரு மில்லை பின்னை - முற்றும்

முடித்திடுவாரோ தமிழ் தன்னை

(நாவலம்)

(நாவலம்)

43