ஞா. தேவநேயப் பாவாணர்
49. தமிழ்நாடு வரவரத் தேய்ந்தமை
நானிருப்ப தேழடுக்கு மாடி' என்ற மெட்டு
1
நாவலம் எல்லாம்முன் தமிழ்நாடு
―
அதில்
நண்ணியது செந்தமிழ்ப் பண்பாடு
மூவரான வேந்தர் முடியொடு அதை
முன்னர்ஆண்டு வந்தனரே நீடு
2
(நாவலம்)
தென்குமரி மலைமுது பாண்டி நிலம்
—
திரைகடல் புகுந்தது காண்டி
செந்தமிழ் நிலத்தின்எல்லை தாண்டி மிகச்
சிறுகிவந்த தேதேரை தீண்டி
(நாவலம்)
3
ஆரியம் வந்துபுகுந்த அன்றே - விந்தம்
அடைந்தது வடவெல்லை யென்றே
சீரிய தமிழ்திரிந்த பின்றே வடம்
செப்பின எல்லை வேங்கடக் குன்றே
(நாவலம்)
4
கழகத்தின் பின்னேகரு நடமும் - மெல்லக் கரைந்துவந்த கொங்குநாட் டிடமும்
அழகிற் சிறந்தசேரன் குடமும் ஆகும்
அரையாரி யத்தென்திர விடமும்
5
இன்றுதமிழ் நாட்டுவடம் சென்னை - அதும்
எதிர்ப்பு மிகுந்ததிடை யென்னை
முன்று தமிழ்ப்பேரு மில்லை பின்னை - முற்றும்
முடித்திடுவாரோ தமிழ் தன்னை
(நாவலம்)
(நாவலம்)
43