உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

6

நாற்றிறத் தொழிலரை நால்வேறு பாலென்று நற்றமிழரை யெல்லாம் நான்காவதாம் சூத்திரனென் றாரியன் சொலத்தன் னைச்சற் சூத்திர னென்றனன் வேளாளன்.

7

வெண்ணிற மாய்வந்த வேற்றவர் மொழியுடன் விண்ணவர் வழியென்று வீழ்ந்து கெட்டான் கண்ணிய மாகமுன் கருதிய தமிழனே

கண்ணான தமிழைப் புண்ணாக்கி விட்டான்.

53. தமிழ்ப் புலவர்க்குப் பிழைப்பின்மை

படிக்காசுப் புலவர் புலம்பல்

‘மீளாத நரகினுக் காளாக்கும் குடியே' என்ற மெட்டு வகை

ப-

பாழானதே என் வாழ்வு பண்ணாருந் தமிழே ஏழாங் கடையிலும் என் எண்ணம் நீர்க் குமிழே

து . ப.

தாழாத பணியெனும் தாளாண்மை யுழவே வாழாது கழிந்ததென் வாளாண்மை மழவே

(பாழா)

2.1

செப்படி மயக்கமே செய்கலையும் - மிகச்

சேணுயர் கழைக்கூத்துந் தெரிந்தோமில்லை

தப்பிய மகளிராய்ப் பிறந்தோமில்லை செல்வத் தையலார் குற்றேவலும் செய்தோமில்லை

2

மூவேந்த ரொடுவேளிர் முதுகுமணன் கொடை முதிர்ந்த நல்லியக் கோடன் முனம் மறைந்தார்

ஈவேந்தன் சீதக்காதி இரகுநாதன் பின்னே

இலவம் பஞ்சேதமிழ்ப் புலவ ரெல்லாம்

(பாழா)

(பாழா)

47