இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48
3
இசைத்தமிழ்க் கலம்பகம்
பிள்ளைப் பாண்டியனொடு வில்லியில்லை - பிழை
பேணாத சாத்தனொடு கூத்தனில்லை
கள்ளத் தனமாய்ச் சொல்லிக் கனிதமிழை இன்று காட்டிக் கொடுப்பவர்க் கேகனம் பொன்மழை
(பாழா)
54. பாண்டி நாட்டின் பண்பிழப்பு
'மாது சிரோன்மணியே' என்ற மெட்டு
பண்
(நாதநாமக் கிரியை)
1
பைந்தமிழ்ப் பாண்டியமே
உன்னைப்
பன்முறை வேண்டியுமே
ஐந்தாம்படை நேயமே
கொண்டாய்
அருந்தமிழும் தேயுமே.
2
இந்தி யெதிர்ப்பவரே இங்கே
இந்நாளுமே யெவரே
அந்தமிழ்க் கானவரே - என்னும்
ஆசான்மார் வாணிகரே.
3
மாணவர்க்கோ முனமே
இங்கே
மாயும் தமிழ்மனமே
ஊணிற் கலந்த தெனுமே
தமிழ்
ஊட்டாது தாயினமே.
தாளம் - முன்னை