30
மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் கொள்ளப்படுதற்கு ஏற்றதே. ழகரத்தைப் போன்றே ளகரமும், கொடுந்தமிழ்களிலும் பிற மொழிகளிலும் சகரவகையாகத் திரிதல்
இயல்பே.
இனிக் கலி, களி, கத்து முதலிய சொற்களுள் ஒன்றன் அடியாகக் கொள்ளின், ‘to roar’, என்ற மொழிப்பொருட் காரணமும் பொருந்தும். கயம் கயவு = கரிக்குருவி, கீழ்மை, மென்மை, பெருமை.
கயம் காயம்
―
=
கரிய வானம்.
“விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின்”
(தொல். எழுத்து. 305)
கயம்-காசம்-ஆகாச (வ.), ‘ஆ’ ஒரு முன்னொட்டு (உபசர்க்கம்). பல்வேறு முன்னொட்டுகளை முற்சேர்த்தல், வடவர் தென்சொற்களை வட சொற்களாக்கும் வகைகளில் ஒன்றாம்.
காயம்-காயா = கரிய மலர்கொண்ட ஒருவகை மரம். காயாம்பூ வண்ணன் = கரிய திருமால்.
காயம்-காயல் = கரிய உப்பங்கழி.
காயல்பட்டினம் என்னும் துறைநகர்ப் பெயரை நோக்குக. கள்-காள்-காளம் = = கருமை, காளமேகம் = கருமேகம்.
காள்-காளி = கரிய மாரியம்மை.
ஒ.நோ: மா-மாயோள் (காளி) = கரியாள்.
மாமை = கருமை.
காளம்-காளான் = கரிய ஆம்பி.
காள + ஆம்பி = காளாம்பி (கருங்காளான்). காள்-காளை = கரிய எருது, எருது.
காள்-காழ், காழ்த்தல் கருத்தல், கருத்து வயிரங் கொள்ளுதல், வேலை செய்து கை வயிரங் கொள்ளுதல், முதிர்தல், கடுத்தல், உறைத்தல். 'காழ்ப்பேறுதல்' என்னும் வழக்கை நோக்குக.
காழ்ப்பு = வயிரம், கைவயிரங் கொள்வதால் ஏற்படும் தழும்பு, உறைப்பு.
காழ் = கருமை, குற்றம், மரவயிரம், கரியவிதை, விதை, விதை போன்ற மணி அல்லது முத்து, முத்தின் ஒளி.
காழ்-காழகம் = கருமை.
காழ்-காய், காய்தல் = வெப்பத்தால் கருகுதல், வெப்பங் கொள்ளுதல், உலர்தல், வெப்பத்தால் எரிதல், எரிதல்போற் சினத்தல்.
=
||
காய்-காய்ச்சு = வெப்பத்தாற் சமை. காய்-காய்ச்சல். காய்த்தல் வேலை செய்து கையில் தழும்பேறல் (கருங்கை, 'கையிற் காய்ப்புக் காய்த்தல்' முதலிய வழக்குகளை நோக்குக.)
வயிரங் கொள்ளுதல், முதிர்தல், மரம் முதிர்ந்து பலன் தருதல்.