புறநானூறும் மொழியும்
17
கந்தபுராணத்திற் கூறப்பட்டுள்ளபடி, கந்தன் இமயமலைச் சரவணப் பொய்கையிற் பிறந்தவனல்லன். இமயமலை தோன்றியதற்கு முன்பே குமரிநாட்டில் குறிஞ்சித் தெய்வமாக வணங்கப்பட்டவன். முதற்காலத்தில் முருகனுஞ் சிவனும் ஒருவனே. திணைமயக்க மேற்பட்டபின், முருகன் முழுமுதற் கடவுளாகவும் வணங்கப்பட்டான்.
கம்மியன் :
=
=
=
=
கடு-கரு. கடு-கடி-கரி. கடுத்தல் = மிகுதல். கருத்தல் தோன்றுதல். கரித்தல் = மிகுதல். மிகுதற் கருத்தினின்றும் தோன்றற் கருத்தினின்றும் செய்தற் கருத்துத் தோன்றியதாகத் தெரிகின்றது. ஒ.நோ: E. make, from L. magnus, great. அலம் + கரி = அலங்கரி அழகு செய். கரு கரி என்னுஞ் சொற்கள் செய்தற் பொருளில் வழங்கிய நூல்கள் இறந்துபட்டன. பண்டைக்காலத்தில் விரிவான அகராதிகள் எழுதப்படாமையால், குமரிநாட்டுச் சொற்களில் பலவற்றைக் காட்டுவதற்கு ஒரு வழியுமில்லை. கரி + அணம் = கரணம் செய்கை, செய்யும் சடங்கு, மணச்சடங்கு, செய்யுங்கருவி. ஒ.நோ : வரி + அணம் = வரணம். கரு + வி = = 5 கருவி. கரு + LOLD = மம் கருமம். ஒ.நோ : பரு + மம் = பருமம். கரணம் இயம் காரணம். கரி + கரியம் - காரியம். ஒ.நோ : கண்டம் - காண்டம். கரு - க்ரு (வ.). ஒ.நோ : துர - த்ரு (வ.). கருமம் செய்கை, தொழில், வினைப் பயன், செயப்படுபொருள். கருமம் என்பது முதலாவது உழவுத் தொழிலையும், பின்பு கைத்தொழிலையுங் குறித்தது. கருமம் - கம்மம் தெலுங்குழவர். கமக்காரன் - உழவன். கம்மி = தொழிலாளி. கம்மாளன் = ஐவகைக் கொல்லருள் ஒருவன். கம்மியம் கைத்தொழில், கம்மாளத் தொழில், கம்மியநூல் = சிற்பநூல். கம்மியன் = தொழிலாளி, கம்மாளன், நெய்பவன். கருமகன் - கருமான் - கருமன் கொல்லன். கருமகன் என்னும் பெயரில் தொழிலையாவது இரும்பையாவது குறிக்கும்.
=
=
கம். கம்மவார்
-
=
கரு என்பது
மாரியல்லது காரியமில்லை யாதலால், கருத்த மேகம் கருவி
எனப்பட்டது என்று கொள்வதும் ஒன்று.
கரகம் : குடம் - குடகம் - குரகம் - கரகம் = வளைந்த அல்லது குவிந்த நீர்க்
—
கலம், ஒ.நோ : முயங்கு மயங்கு, முயல் - மயல், குடம் - கடம்,
குடும்பு - கடும்பு, முடி - மடி.
கரு : கரு - கருப்பு - கருப்பம் - garbha. மேகம் சூல் கொண்டபோது கருத்திருத்தலால், சூல் கருவெனப்பட்டது.
கவசம் : கவி-கவசம்.
கவரி : இஃதொரு விலங்குப் பெயராதலானும், வேறு பெயர் தமிழி லிதற்கின்மையானும், இது தமிழ்ச் சொல்லென்றே தெரிகின்றது. கவரி - சவரி - சவரம் - சமரம் - சாமரம்.
―
களம் : மேற்கூறப்பட்டது,