30
ஆரியப்
படைகடந்த
பண்பாட்டுக் கட்டுரைகள்
நெடுஞ்செழியன்
காலத்து மதுரை
மதிற்பொறிகள்
1.
வளைவிற் பொறி = வளைந்து தானே எய்யும் சூழ்ச்சிய (எந்திர) வில்.
2. கருவிரலூகம்=கரிய விரலையுடைய குரங்குபோலிருந்து சேர்ந் தாரைக் கடிக்கும் பொறி.
3. கல்லுமிழ் கவண்.
4. பரிவுறு வெந்நெய் = காய்ந்திறைத்தலாற் சேர்ந்தாரை வருத்துவ தாய நெய்.
5. பாகடு குழிசி = செம்புருக்கி யிறைக்கும் மிடா.
6. காய்பொன்னுலை
பட்டிருக்கும் உலை.
=
ருகக்காய்ச்சி யெறிதற்கு எஃகு
7. கல்லிடு கூடை = டங்கணிப் பொறி என்னும் கல்லெறியுங்
கூடை.
8. தூண்டில் = தூண்டில் வடிவாகப் பண்ணிவைத்துக் கிடங்கு நீங்கி மதில் பற்றுவாரைக் கோத்துவலிக்குங் கருவி.
=
9. தொடக்கு = கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலி.
10. ஆண்டலையடுப்பு = ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிட, பகைவரின் உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி.
11.
= கவை கிடங்கிலேறின் மறியத்தள்ளும் இருப்புக்கவை. 12. கைபெயரூசி
=
மதிற்றலையைப் பற்றுவாரைக் கையைப்
பொதுக்கும் ஊசிப்பொறி.
13. சென்றெறி சிரல் = மாற்றார் மேற்சென்று கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறி.
14. பன்றி = மதிற்றலையி லேறினா ருடலைக் கோட்டாற் கிழிக்க இரும்பாற் செய்துவைத்த பன்றிப் பொறி.
15. பிற = நூற்றுவரைக்கொல்லி(சதக்கினி), தள்ளிவெட்டி, களிற்றுப் பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுபொறி, புலிப்பொறி, குடப் பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி முதலியன.
சிந்தாமணிச் சிறப்புச் சொற்கள்
அணிகம் = ஊர்தி(Conveyance, Vehicle)
ஆம்புடை = வினைசெய் வழி (Means, Expedient)
உவளகம் = அந்தப்புரம்(வ.) (Zenana).
உவனித்தல் = அம்பெய்யத் தொடங்குதல்.
உழைக் கண்ணாளர் = அருகிலிருக்கும் கண்போன்ற அன்பர்.