உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவை என்னுஞ் சொல் வரலாறு

6. பாவை போன்ற இஞ்சிக் கிழங்கு.

"செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றி” (மலைபடு. 125)

"பாவை யிஞ்சியுங் கடவைச் சுண்ணமும்” (பெருங், உஞ்சைக். 53:21

7. பாவை போல் அழகிய பெண்.

“பாடக மெல்லடிப் பாவை” (தேவா. 538:1)

8. சிறுமி.

9. பாவை நடம்.

“திருவின் செய்யோ ளாடிய பாவையும்” (சிலப். 6:61).

10. பாவை நோன்பு.

“நம் பாவைக்குச் செய்யுங் கிரிசைகள்” (திங். திருப்பா.2) 11. திருவெம் பாவை.

12. திருப் பாவை.

49

"தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய்” (திங்திருப்பா. தனி) 13. தோற் பாவை.

பாவை என்னும் நூல் உலக வழக்கிற் பாவாய் என்றுந்திரிந்து பெண்ணியற் பெயராகும்.

இது காறும் கூறியவற்றால் பாவை என்னுஞ் சொல்லின் சிறப்பையும், அது மேலையாரிய மொழிகளினுஞ் சென்று வழங்கும் பரப்பையும் கண்டுகொள்க.

தமிழ்ப்பாவை எழுத்தாளர் மன்றம், 8ஆம் ஆண்டு சிறப்பு மலர் (1966-67)