உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9

திரு என்னும் சொல் தென்சொல்லா,

வடசொல்லா?

தமிழில் தற்பவமாக, அதாவது வடசொல் திரிபாக அல்லது சிதைவாக ஒரு சாராரால் கருதப்படும் சொற்களில் திரு என்பதும் ஒன்று.

"நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையத்து”

என்று தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்திலும்.

ce

"திருவுடைத் திருமனைனயது தோன்று கமழ்புகை" 'விட்டோரை விடா அள் திருவே"

‘திருளி லல்லது தொலைவில் லறியார்"

என்று புறநானூற்றிலும்.

(379)

(358)

(20)

'திருச் செற்றுத் தீயுழி யுரித்து விடும்”

"சேருந் திறனறிந் தாங்கே திரு” "திரு நுதல் நல்லவர் நாணுப்பிற”

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்”

என்று திருக்குறளிலும்.

‘இருநிலங் கடந்த திருமறு மார்பின்”

என்று பெரும்பாணாற்றுப்படையிலும்

(168)

(179)

(1011)

(1072)

(20)

திருநுதல் (2:41), திருத்தக்கீர் (11:111), திருஞெமிர கலம் (28:157), திருமொழி (10:12), திருமகள் (5:213), திருமால் (17) என்று சிலப்பதிகாரத்திலும், இங்ஙனமே பிற நூல்களிலும் திரு என்னும் சொல் பல்வேறு பொருள்களில் வழங்கப்பட் டுள்ளது.

உலக வழக்கில், திருக்கலியாணம் திருக்கார்த்திகை திருக்குறள் திருக்கூத்து திருநாள் திருநீறு திருப்பனி திருப்பதி திருப்பதிகம் திருப்பாற் கடல் திருப்புகழ் திருமகள் திருமான் திருமங்கலம், திருமங்கலியம் திருமணம் திருமலை திருமால் திருமுகம் திருமுடி திருமுறை திருமுன் திருமேனி திருவடி திருவரங்கம் திருவருள் திருவள்ளுவர் திருவாக்கு