உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

பாவாணர் உரைகள்

நன்றாகத் தானிருக்கிறான். நீ தொட்டதை உண்பார் இல்லையே, உன்னுடைய மொழியும் அப்படித் தானேயிருக்கிறது. நீ அதனாலே தான் தாழ்த்தப்பட்ட வனாகிறாய்? நாகரிக மற்ற ஆப்பிரிக்கன் கூடத் தாய்மொழியில் பேசுவதா யிருந்தால் அது உயர்வு என்றுதானே அறிஞர்களெல்லாம் கருதுகின்றார்கள். "எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே” என்று மனோன்மணியம் சுந்தரனார் சொல்கிறார். அப்படிப்பட்ட தமிழ், மேனாடு களுக்கெல்லாம் தலைமை யானது. அப்படிப்பட்ட மொழியை நீ தாழ்வாகக் கருதிக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது.

இந்த அகரமுதலியில் என்ன செய்திருக்கிறார்களென்றால் தமிழை எவ்வளவு தாழ்த்த வேண்டுமோ அவ்வளவு தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். அதில் தமிழ்ச் சொற்கள் பல இல்லவே இல்லை. தென் சொற்களை வடசொற்களாகக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு மேலே சொற்களுக்குத் தவறான பொருள்களை உரைத்திருக்கிறார்கள். சாமை என்ற பொருள் ஒன்று இங்கு விளைகிறது. அது வடநாட்டில் விளைவதேயில்லை. தொன்று தொட்டு தென்னாட்டிலே விளைந்து வருகிறது. வேத ஆரியர்கள் ஆ இந்தியாவிற்கு வந்து புகுந்த உடனேயே தொடர்பு வைத்துக்கொண்டார்கள். எதற்கென்றால் சமற்கிருதத்துக்கோ, பிராமணர்களுக்கோ ஓர் உயர்வு வேண்டுமென்றால் இந்தியா முழுதும்தான் அவர்கள் உயர்வைப் புகுத்த வேண்டும். ஓர் இடத்திலேயே உயர்வைப் புகுத்தி, இன்னொரு இடத்திலே உயர்வைப் புகுத்தாமல் இருக்க முடியாது. அதற்காக வேத காலத்தில் அவர்களுக்குத் தொடர்பிருந்தது இங்கே. வேதத்திலேயே தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. வேதத்திற்கு முன்பே தமிழ்ச் சொற்கள் உண்டு. அதற்குக் கரணியம் என்னவென்றால் தமிழர்தாம் தெற்கேயிருந்து வடக்கே சென்று திராவிடராகத் திரிந்தார்கள். பிராகி என்ற மொழி வடக்கே போகப் போகச் சிறுபான்மை மொழியாகியது. அதிலும் பெரும்பாலோர் மலைவாழ்நர்களாக இருப்பதால், பல மேனாட்டறிஞர்கள் பின்வருமாறு தவறாகக் கருதுகின் றார்கள். இவர்கள் மலைவாழ்நர்களாக இருப்பதனாலும், இவர்களது மொழியானது திருந்தாமல் இலக்கிய இல்லாததாக இருப்பதனாலும் இதுதான் முந்திய நிலைமையைக் குறிக்கிறது என்கிறார்கள். இல்லவே இல்லை; இது தவறு. அவர்கள் கீழே வாழ்ந்தவர்கள் தாம் அந்தக் காலத்திலேயே போரும் கொள்ளையும் ஏற்பட்டு அடிக்கடி காப்பிற்கு இடமில்லாமல் இருந்ததினாலே அவர்கள் மேலே போய் வாழ்ந்தார்கள். எடுத்துக்காட்டாகச் சொல்கிறேன். -----யிலே, 'பார்க்கு' என்பது வாய் என்று பொருள்படுகிறது. வாய் என்பது ‘பார்க்' என்று குறுகுகிறது. வாய் என்றால் வழி என்ற பொருளுடையது. வருவாய் என்று சொல்கிறோம். வருவாய் என்றாலும் வரும்வழி என்றாலும் ஒன்று. உணவு புகுகிற வழி வாய்வழி.

-