உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் சொற்பொழிவு

45

என்பதை ஆங்கிலத்தில் மாற்றும்போது கழகம் என்னும் சொல்லை Organisa- tion' என்று மொழிபெயர்க்கக் கூடாது. ஏனெனில் ‘Organisation' என்பது பொதுச்சொல்.

Society - Congress - Association ஆகிய மூன்று சொற்களுக்கும் Organisa- tion என்பது பொதுச்சொல். எனவே கழகம் என்பதற்கு 'Congress' என்பதே சிறந்த மொழிபெயர்ப்பாகும். அதற்குப் பொருள் பெருங்கூட்டம் என்றாகும்.

இனி, எழுத்து வன்மை உண்டா என்னும் கேள்வியும் தேவையன்று. அரசியல் கட்சியில் உள்ளவரா என்றும் கேள்வி அறவே இருத்தல் கூடாது. பேராயக் கட்சியினருக்கு இங்கு இடமேயில்லை. தி.மு.க. வானாலும் தமிழ் முன், கட்சி பின்னாகக் கருதுவார்க்கே இடமுண்டு. இரண்டையும் சமமாகக் கருதினாலும் சேரமுடியாது.

இக்கழகத்தில் சேருவார்க்கு மதம்கூடத் தடையாக இருக்கக் கூடாது. மறைமலையடிகள் முழு அளவில் மதத்தில் ஈடுபடவில்லை. தமிழ்ப்பணி என்று வந்தால் மதச்சார்பு கருதாமல் என்னையும் உடன் சேர்த்துக் கொள்வார்.

கட்சியில் சேர்ந்தவர்கள், தமிழுக்கு மாறானவர்களைக் கட்சியுள் எதிர்க்க முடியாது.

மூன்று கையொப்பங்கள் தேவையில்லை; ஒரே கையொப்பம் போதுமானது. எப்போதும் தூயதமிழிலேயே பேசுவேன், எழுதுவேன் என்பதை 'இயன்றவரை' என்பதையும் சேர்த்து அமைத்துக் கொள்க. ‘தனித்தமிழ்க் கொள்கையைப் பரப்ப இயன்றதைச் செய்வேன்' என்பதைப் புதிதாய்ச் சேர்த்துக் கொள்க.

மிகவும்

நமக்குள் ஒற்றுமை இன்றியமையாதது. திருமால் சிவநெறிகளை ஒரே 'தென்மதம்' என்று சொல்லவேண்டும். நாவின் சுவை வேறுபட்டிருப்பது போல் மனத்தின் சுவையும் வேறுபட்டது; பலகாரம் உண்பதுபோல.

பெரியார் ஆராய்ச்சியில்லாததால் மதங்களை முற்றும் மறுத்துப் பேசுகின்றார். மதம் என்பது எய்ப்பில் வைப்புழி போல, அதாவது பிற்காலத்திற்குச் சேர்த்து வைப்பது போன்றது.

இதனால் உ.த.க.வினர் மதத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டு மென்றில்லை. நம்பிக்கை இல்லாதவரும் இதில் உறுப்பினராயிருக்கலாம். தமிழ்த் தெய்வங்கள் வேதத்தில் இல்லை.

இனி, நான் ஒரு போராட்டம் நடத்துவேன். உண்ணா நோன்பும், சிறைபுகுதலும் அப்போராட்டத்தில் இருக்கமாட்டா. அது எழுத்து, சொல் ஆகியவற்றால் நிகழும் போராட்டம்.