உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு

75

வலப்புக்கு என்ற செயற்கை மொழிகளையெல்லாம் இப்பொழுது பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகையினால் நாள்தொறும் வாய்தொறும் பேசுவதினாலே ஒருமொழி உயிருள்ள மொழி என்று ஆகிவிடாது.

சமற்கிருதம் ஒரு பாவை (பொம்மை) போன்றது. கடையிலே இருக்கிறதன்றோ பாவை; அஃது என்றைக்காகிலும் பிறந்ததா? என்றைக்காகிலும் இறந்ததா? அது போன்றது இந்தச் சமற்கிருதம். அதை வைத்துக் கொண்டு இவ்வளவு பெருமை பண்ணுகிறார்கள். எதனா லென்றால் அந்த அளவுக்கு நாம் அடிமையாகப் போனதனால்தான். இந்த முயற்சிகளையெல்லாம் நாம் தடுத்தே ஆக வேண்டும். தமிழைக் கெடுப்பதற்கென்றே இந்தச் சமசுக்கிருதம் தோற்றுவிக்கப்பெற்றது. என்னுடைய தமிழர் மதம் என்னும் நூலிலே கூட அது வழிபாட்டிற்குத் தகாதமொழி என்று நான் சொல்லியிருக்கின்றேன்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், சொல்கிறேன். சமற் கிருத்திற்கும் தமிழுக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் பொதுவாக இருக்கின்றன. அவர்கள் தமிழிலிருந்து அத்தனைச் சொற்களையும் கடன் கொண்டு விட்டு, இப்பொழுது கடன் கொடுத்தவனையே கடனாளி என்கிறார்கள். இதற்கெல்லாம் நம் ஏமாளித்தனந்தான் காரணியம். இப்பொழுது நாம் சில அடிப்படைச் சொற்களை எடுத்துக் கொள்வோம், காலம், உலகம் போல. தொல்காப்பியத்திலே ஒரு நூற்பா வருகிறது, கிளவியாக்கத்திலே!

காலம் உலகம் உயிரே உடம்பே

பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்

பால்பிரிந் திசையா உயர்திணை மேன.

-

என்பது அது. இந்த நூற்பாவின் தொடக்கத்தில் வரும் காலம், உலகம் இரண்டும் தூய தமிழ்ச் சொற்கள். உலகம் என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். உலவுதல் என்றால் வளைதல் என்று பொருள் உலாப் போதல் என்று சொல்லப்படுவதில்லையா? அரசன் ஊரை வலமாக வளைந்து வருவதைத்தான் உலாப் போதல் என்பது. உல-என்றால் உருட்சி அல்லது திரட்சி. உலமரல் என்றால் சுழலுதல். உலமரல்தான் அலமரல் என்று திரியும்.

அலமரல் தெருமலல் ஆயிரண்டும் சுழற்சி, என்பது நூற்பா. உலவு-உலகு; அம் என்பது ஒரு பெருமைப் பொருள் பின்னொட்டு. இது பெரியதைக் காட்டும். குன்று சிறியது. குன்றம் பெரியது. விளக்கு என்றால்