உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறுப்புரை மாண்பு


98

மறுப்புரை மாண்பு

மாயின், தொல்காப்பியம் அசோகன் காலத்திற்குப் பின்னரே தோன்றி யிருத்தல் கூடும்.

புள்ளிக்கொள்கை

"புள்ளிக்கொள்கை பற்றியும் பலவிடத்துக் கூறப்பட்டது. கி.பி. 2ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்பும்தான் புள்ளி தோன்றுகின்றது என்று குறிப்பிடப்பட்டது. வெட்டெழுத்துகளின் எழுத்து முறைமை இலக்கணக் கொள்கையைப் பின்பற்றுவதற்கு ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் சென்றிருக்கு மென்று நாம் கருதிக்கொள்ளலாம். வெட்டெழுத்துகள் பொதுமக்கள் எல்லார்க்குமென்று ஏற்பட்டவை. பொது மக்கள் வழக்கங்கள் எளிதில் மாறுவதில்லை. ஆதலால், தொல்காப்பியம் கிறித்தவவூழித் திருப்பத்தில் அல்லது அதற்குச் சற்று முந்தித் தோன்றிய தாகக் கொள்ளலாம். எங்ஙனமிருப்பினும், சமற்கிருதத்திற் போல் எழுத்து முறைமைக்குத் தேவையின்றியே இலக்கணக் கூறுபடுப்பு வளர்ச்சி யடைந்திருக்கக் கூடியதே. இனி, எழுத்து முறையைப் பற்றிய குறிப்புக ளெல்லாம் பிற்கால வளர்ச்சிகள் என்பதும் கொள்ளக்கூடியதே.

இலக்கணம்

66

ஆனால், அங்ஙனமாயினும் அது காத்தியாயனார் காலத்துக்கு முந்தியதாகாது. காத்தியாயனரே இலக்கணம் என்னும் சொல்லாட்சியை, 'லக்ஷ்ய' அல்லது வழக்கு என்பதை அடிப்படையாகக் கொண்ட அணங் கத்தைக் (இலக்கணத்தைக்) குறித்ததென்று விளக்க வேண்டியிருந்தது. ஏனெனின், தமிழிலக்கணம் தமிழ்நாட்டில் இக் கல்வியின் நெடுந் தொன்மை யைக் காட்டுகின்றது.

தொல்காப்பியத்தில் வெவ்வேறு படைகள்

66

'முற்காலத்தவர் ஒருவரும் பிற்காலத்தவர் ஒருவருமாக இருபெரு நூலாசிரியர் தொல்காப்பியர் என்னும் பொதுப்பெயர் கொண்டிருந்ததனால் ஏற்பட்ட மயக்கத்தையும் குழப்பத்தையும் யாம் ஏற்கெனவே விளக்கி யிருக்கின்றேம். இக் கருத்துப்படி மயக்கம் நேரக் கூடியதாதல் இற்றைத் தொல்காப்பியத்தைக் கவனமாகக் கூறுபடுத்தி ஆயத் தூண்டுகின்றது. அத்தகைக் கூறுபாட்டாய்வுதான் அந் நூலின் பல்வேறு படைகளை வெளிப்படுத்திக் காட்டவொண்ணும். அப் படைக்கு வேறு காரணங்கள் பற்றிக் காலங் குறித்தல் வேண்டும்.

மறுப்பு

அசோகன் காலம் கி.மு. 272-31. குமரிநாட்டினின்று முதற்கால மக்கள் வடகிழக்கும் வடக்கும் வடமேற்குமாக வடஆசியாவிற்கும் ஐரோப்பா விற்கும் சென்றபின், அவர் வழியினர் இந்தியாவுக்குத் திரும்பி வரு