உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறுப்புரை மாண்பு


88

மறுப்புரை மாண்பு காப்பியர் மேலையர் கொள்கையையும் சீனர் கொள்கையையும் பின்பற்றாது அவ் வனைத்திந்தியக் கொள்கையையே பின்பற்றினார் என்பதுபற்றிக் கருத்துவேறுபா டிருக்கமுடியாது. சமற்கிருத நெடுங்கணக்கின் அமைப்பு முறை ஏற்கெனவே வேறொரு கட்டுரையில் ஆயப்பட்டுள்ளது. அவ் வெழுத்துகளின் தெள்ளிய ஒலிப்புமுறை இக்கால ஒலிநூலை நினைவுறுத்தி னும், இந்தியாவிற்கே சிறப்பாக வுரியதாகும். அவை யாவும் மொழிகளின் உலகப் பொதுவியல்புகள் தொல்காப்பியர் அவற்றை உணர்ந்துகொண்டார். அதனால், அவர் அனைத்திந்தியக் கொள்கையைப் பின்பற்றுவதில் தமிழின் சிறப்பியல்பைக் கெடுக்கவில்லை.

வடக்கொடு நெருங்கிய தொடர்பு கொண்டபின்

"இவை யாயும், சமற்கிருத இலக்கண முறைமையொடு நெருங்கிய தொடர்புகொண்ட பின்னரே தொல்காப்பியம் தோன்றிற்றென்பதை மெய்ப்பிக்குஞ் சான்றுகளாகின்றன. மேலையர் 19ஆம் நூற்றாண்டிற் சமற் கிருத இலக்கணத்தைக் கண்டுபிடித்ததே மேற்கில் மொழிநூல் வளர்ச்சிக்கு வழிகாட்டியது போன்று, கிழக்கில் சமற்கிருதத்தோடும் திரவிடமல்லாத மொழிகளோடும் தொடர்புகொண்டதே, தமிழின் ஒலியியலையும் இலக்கண அமைப்பையும் வண்ணிக்கும் முயற்சியை மேற்கொள்ள நேரடியான தூண்டுகோலா யிருந்திருத்தல் வேண்டும். இது இயற்கைதானே கையாளும் இனக்கலப்புப் போன்றது. இங்ஙனமே உலகமெங்கும் நாகரிகங்களும் கலைப்பண்பாடுகளும் தோன்றியுள்ளன. இம் முயற்சியும் முதலியன்மை

யுள்ளதே.

கி.மு. 4ஆம் நூற்றாண்டுக் காத்தியாயனர்

“திரவிடர் இருக்கு வேதக் காலத்தில் ஆரியரொடு தொடர்பு கொண் டிருக்கலாம். ஆனால், சமற்கிருதத்திற்குத் தமிழ் நாகரிகக் கலைப் பண்பாட் டோடு ஏற்பட்ட தொடர்பு திட்டவட்டமான தொன்றாகையால் பிந்தியே நேர்ந்திருத்தல் வேண்டும். சடங்குமுறைமைக்கும் பிற பயன்பாட் டிற்கும் வேதங்கள் தோரா. கி.மு. 1000 போல் தொகுக்கப்பட்டதாகச் சொல்லப்படு கின்றது. வேதமந்திரங்களின் ஒலியியல் இலக்கணக் கூறுகளைப் போற்றிக் காத்தற்குத் தோதாகப் பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் விளைவாக, இலக்கணமும் ஒலியியலும் சொல்லியலும் சொற்றொடரியலும் வளர்ச்சியுற்றன. பாணினியின் இலக்கணமுறை நிறைவு பெறப் பல தலைமுறைக் காலஞ் சென்றிருத்தல் வேண்டும். பாணினி காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அல்லது சற்று முன்பு என்று குறிக்கப்பட் டுள்ளது. பாணினிக்குத் தமிழரொடு அல்லது அவர் கலைப்பண்பாட்டொடு ஏதேனும் தொடர்பிருந்ததாகப் பாணினி மொழியில் யாதொரு குறிப்பு மில்லை. கி.மு. 4ஆம் நூற்றாண்டினரான வரருசி என்னும் காத்தியாயனர், பாணினி நூற்பாக்களின் குறை நிரப்பலாகிய வார்த்திகங்கள் என்னும்