தமிழன் உரிமை வேட்கை
125
பெய்தல் என்ற சொல் கொச்சை வழக்கில் பேய்தல் என்று வழங்கும். அதனால், “பேய்ந்துங் கெட்டது, ஓய்ந்துங் கெட்டது” என்னும் பழமொழி எழுந்தது.
பேய் பேயு-பேசு பேச்சு.
பேசு - (வ) பாஷ் (bhash) - பாஷா
ஒ.நோ. : தேய்-தேயு-தேசு
(வ.) தேஜஸ். தேசு - (இ.) தேஜ்.
கொச்சை வழக்கினின்றும் செஞ்சொல் அல்லது இலக்கணச் சொல்
பிறப்பதுண்டு.
எ-டு : கொண்டுவா
—
கொண்டா கொணா
―
―
கொணர். கொண்டா
என்பது கொச்சைச் சொல்லாகவும், கொணா, கொணர் என்பன செஞ்சொல்லாகவும், கொள்ளப்படுதல் காண்க.
இனி, ஆரிய முதனூலானதும், இறைவனாலும் இயற்றப்படாது என்றுமுள்ளதாகச் சொல்லப்படுவதுமான வேதத்தின் பெயரே, தென் சொல்லின் திரிபாயிருப்பது, சிறப்பாகக் கவனிக்கத் தக்கதும் மிக மகிழ்ச்சி தருவதுமாகும்.
விழித்தல் = 1. கண்திறத்தல், 2. கவனித்துப் பார்த்தல், 3. அறிதல், 4. விளங்குதல், 5. தெளிதல்.
விழி = 1. கண் 2. அறிவம் (ஞானம்). "தேறார் விழியிலா மாந்தர்' (திருமந். 177)
விழி - L. vide, Gk. (w)eid. OE. wit, Skt. வித்.
வித் - வேத = அறிவு, அறிவு நூல், மறை.
செவியுறுதல்
=
கேட்டல்.
செவியுறு - (வ.) ச்ரு - ச்ருதி = 1. கேள்வி, 2. கேட்டறியப்படும் வேதம். முன்னுதல் = கருதுதல், AS. mun (to think)
முன்னம் = 1. கருத்து, 2 கருதும் மனம் (திவா.).
―
முன் முன்னம் - முனம் - மனம். (வ.) மனஸ். L. mens, E.mind. மன் + திரம் = மந்திரம் = 1. கருதுந்திறம் 2. (திண்ணிய) எண்ணம் (பிங்.) 3. சூழ்வு, 4. நிறைமொழியான மறைமொழி. (தொல். செய், 176).5. திருமூலர் திருமந்திரம் 6. பேய்வினை மறைமொழி. (வ.) மந்த்ர. மன்னுதல் = பொருந்துதல், கூடுதல், நிலைபெறுதல்.
மன்
―
மன்று - மந்து - மந்தை
=
மன் – மனை. மன் + திரம் = மந்திரம் = 1. வீடு. “மந்திரம் பலகடந்து (கம்பரா. ஊர்தேடு. 138) 2. அரண்மனை (பிங்.). 3.திருக்கோவில் (பிங்.).