உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

ம்

301

கண்டேனாயினம், ஆங்கிலப் பேச்சாற்றலை இழந்து விட்டத னால், ஆங்கிலப் பட்டம் பெறும்வரை கல்லூரியுட் கால் வைக்க முடியாது போயிற்று. அதனாற் பதவியுயர்வும் பொருளியல் முன்னேற்றம் இல்லாதுபோயின.

1938இல் நான் திருச்சிப் புத்தூர் ஈபர் மேற்காணியார் (Bishop Heber) உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரிய னாக இருந்தபோது திரு. (C) அரசகோபாலச்சாரியார் தமிழ் நாட்டு முதலமைச்சராகி இருநூறு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தினார். உடனே தமிழர் எதிர்ப்பு எழுந்தது. இந்தி புகுத்தப்பட்ட பள்ளிகட்கு முன் மறியல் செய்த தமிழ்த் தொண்டர் சிறையிடப்பட்டனர். பெரியாரும் அதற்காளாயினர். முறைப்பட்ட தமிழ்க் காப்பு வகுப்பு வேற்றுமையக் கிளர்ச்சியாகத் திரிக்கப்பட்டது. சிறைத் தண்டனையுற்ற தமிழ்த் தொண்டரின் தற்காப்பிற்காக ‘ஒப்பியன் மொழிநூல் - முதற்புத்தகம் முதற் பாகம்’ என்னும் நூலை எழுதினேன். ஆயின், அதனை வெளியிடத் தமிழ்ச் செல்வரும் தமிழ்க் கட்சித் தலைவரும் முன்வரவில்லை; சிறு தொகையும் உதவவில்லை. அதனால், என் அடங்காத் தமிழ்ப்பற்றும் மடங்காத் தன்மானம், என் கைப்பொருள் கொண்டு அதை வெளியிட்டு ஓராயிரம் ரூபாஇழக்கச் செய்தன. அங்ஙனந் தாங்கொணாச் சூடு கண்டதினால் அதன்பின் என் சொந்தச் செலவில் எத்தகை நூலையும் வெளியிட மிகவும் அஞ்சினேன். துணிந்து வெளியிடப் பொருளும் என்னிடமில்லை.

L

-

அந்நிலையில், இலக்கணம்., சொல்லாராய்ச்சி, மொழி யாராய்ச்சி, அரசியல், வரலாறு, விளையாட்டு முதலிய இலக்கியப் பொருள் பற்றியனவும், புலமக்களன்றிப் பொதுமக்கள் ஒவ்வாதனவும், விரைந்து விலையாகாதனவும், ஆரிய வெறியர்க்கு மாறானவும், வெளியீட்டிற்குப் பெருஞ் செலவு செய்ய வேண்டி யனவும், சிறியவற்றோடு பெரியனவுமான இயற்றமிழ் இலக்கணம், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திரவிடத் தாய், சுட்டுவிளக்கம், முதற்றாய் மொழி, பழந்தமிழாட்சி, மாணவர் உயர்தரக் கட்டுரை யிலக்கணம் (2 பாகம்) என்னும் எண்ணூல்களொடு, நான் ஏற்கெனவே வெளியிட்ட கட்டுரை விரைவியல் என்னும் நூலையும், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக ஆட்சி மேலாளரான தாமரைத் திரு.வ.சுப்பையாப் பிள்ளை அவர்கள் வார முறையில் (Royalty System) ஒவ்வொன்றாக வெளியிட்டு, விற்பு விலையில்