உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




370

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

162. ஆலைத் தொழிலாளர் ஆற்றும் பணிக்கேற்ற கூலித் திறம்பெறுங் கொள்கையின் - மேலும் அடிமைத் தனமில்லா ஆட்சிதன் மானக் குடிமை சிதம்பரத்தின் கோள்.

163. ஆங்கிலர்நா வாய்க்குழும்பின் ஆவுருபா ஒரிலக்கம் வாங்க மறுத்து வருந்தொல்லை - ஓங்கினுமே கொள்கை விடாது குடிமாண் சிதம்பரம்தன் உள்கை சிறந்தான் உயர்ந்து.

164. தனக்குச் சமமாகத் தன்மனைவி வாழ்ந்து மனக்கினிய மந்திரியாய் மாணுங் - கணக்காக இல்லறம் ஆற்றினான் ஈகைச் சிதம்பரம்தான் வள்ளுவன் கண்ட வகை.

165. பிறப்பால் சிறப்பில்லை என்னும் பெருநூல்

அறப்பால் மனையோ டணைந்து - பிறப்பிழிந்தான் என்னும் ஒருவனை இல்லம்வைத் துண்பித்தான் மன்னும் சிதம்பரத்தின் மாண்பு.

166. தாய்நாடே போற்றியெனுந் தக்கவங் கத்தொடரை வாய்மொழியாற் கண்டித்த வன்தண்டல் - நாயகற்கே வாயுள்ள நாளும் வலித்துரைப்பே னென்றுரைத்தான் பாயும் சிதம்பரவேங் கை.

167. மாடுபோற் செக்கிழுத்து மட்டிபோற் கல்லுடைத்து வேடுபோற் கேடாய் உடையுடுத்துப் - பாடுபட்டான் கேழ்வரகுக் கூழுண்டு கீழ்விலங்கிற் கீழ்விலங்கின் தாழ்வுறுதற் கோசிதம்ப ரம்

168. கொலையுங் கடுஞ்செயலும் கூடாது வேற்றார் குலையும் வகையெதிர்க்கும் கொள்கை - தலையாகக் கொண்டான் சிதம்பரம் கூற்றாலும் ஆசுகொலை கண்டோம் அவன்கண்ட னம்.

169. ஆற்றும் பணிமீட்டான் ஆங்கில னேனுமவன் வேற்று மொழிப்பெயரை வேட்புடன்தன் - பேற்றுமகன் பேராக இட்ட பெருந்தன்மை பாராட்டும்

சீராம் சிதம்பரம் செப்பு.