372
பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்
5. மும்மொழிப்புலவர்
175. மொழியும் இலக்கியமும் முத்தமி ழும்பேச்
சழியும் வடமாங் கிலமும் - கழிபுலமை
கொண்ட மறைமலையார் கோன்மை தமிழ்நிலமுன் கண்டதும் கேட்டதும் இல்.
6. மொழிபெயர்ப்பாளர்
176. வேற்று மொழியின் விரகன் விழுப்பனுவல் ஆற்று மரபும் அரும்பொருளும் - தேற்றி அடிகள் மொழிபெயர்க்கும் ஆற்றற்குச் சான்று முடிகொள்ளுஞ் சாகுந் தலம்.
7. சொற்பொழிவாளர்
177. இன்குரலும் இன்சொல்லும் இன்னிசையும் இன்கதையும் நன்பொருளும் ஏதுவுடன் நற்காட்டும் - தென்பாய்ப் பகைவரு முண்ணாளும் பன்னாளும் வேட்கும் வகையடிகள் சொற்பொழிவு வாய்ப்பு
8. எழுத்தாளர்
178. கடிதமும் கட்டுரையும் கண்டனமும் கற்கும் படியெழுதும் பாடமும் பன்னூல் - நடிகதையும் மற்றோ ருரைமறுப்பும் மன்னும் புதினவரை வுற்றார் மறைமலை யார்.
9. பல்கலைச் செல்வர்
179. தோற்றுந் தொலையுணர்வு தூய மனவசியம் ஆற்றும் அறிதுயில் ஆர்வாழ்வு - மாற்றும் மறுமை மறைமலையார் மாணுங் கலைகள் பொறுமை யுடன்கற்ற போக்கு.
10. தனித்தமிழ்த் தந்தையார்
180. மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக்