பாடுபொருள் 13
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை புதுமை! புதுமை!
அசைவைச் செய்தாய், ஆங்கே - ஒலியாம்
அலையைச் செய்தாய் நீயே! நசையால் காணும் வண்ணம் - நிலமும்
நான்காய் விரியச் செய்தாய்! பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம்
பைந்தமிழ்பேசச் செய்தாய்! அசையாம் தமிழைத் தந்தாய் - பறவை ஏந்திழை இனிமைக் குரலால்’ இவையும் வான் பற்றியவையே:
எண்ணங்கள் போல - விரி வெத்தனை கண்டாய் - இரு கண்ணைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள் கூடிச் சுடர்தரும் வான்!
வண்ணங்களைப் போய்க் - கரு மாமுகில் உண்டு - பின்பு
பண்ணும் முழக்கத்தை, மின்னலை, அம்முகில் பாய்ச்சின வானவில்லை.
வண்ணக் கலாப மயில் பண்ணிய கூத்தை - அங்கு
வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தனள்! மேல்முத்தை வான்சொரிந்தான்!
விண்முத் தணிந்தாள் - அவள் மேனி சிலிர்த்தாள் - இதைக்
22. பாதா.க. தொகுதி-2 பக்கம் 33