பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 103 பிடிப்பதற்காகப் புதுவை வீட்டின் மீது பெருந்தொகை கடன் வாங்கி வந்திருந்தாரென்றும், அததொகையை வீணாகச் செலவழித்து விட்டு உள்ள(மன) அமைதியில்லாமல் வருந்திக் கொண்டிருந்தாரென்றும் தெரிந்து கொண்டேன். அவரிருந்த உள்ள(மன) நிலையில் அதைப் பற்றிக் கேட்டால் வருந்துவார் என்று எண்ணி நான் எதுவும் கேட்கவில்லை. அந்த நிலையிலும் படம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை அவர் உள்ளத்தை விட்டு நீங்கவில்லை. பாரதிதாசன் பிக்சர்சின் சார்பில் பாண்டியன் பரிசு படப்பிடிப்புத் துவக்கவிழா ஆடம்பரமாக நடைபெற்றது என்றும், அன்றைய முதலமைச்சர் காமராசர் விழாவில் கலந்து கொண்டார் என்றும் கேள்விப்பட்டேன். நான் கூட பாவேந்தரோடு நடிகர் சிவாஜி கணேசன் இல்லத்துக்கு ஒரிரு முறை சென்றதுண்டு. என்னைக் காரிலேயே உட்காரும்படி கையமர்த்திவிட்டு அவர் மட்டும் வீட்டுக்குள் செல்வார். அவர் உள்ளே காலடி எடுத்துவைத்ததும் வரவேற்பு பலமாக இருக்கும். சிற்றுண்டியும் நடக்கும். ஆனால் சோர்ந்த முகத்தோடு திரும்பிவருவார். t 'பாண்டியன் பரிசு பெரிய அளவில் திரைப்படமாக ஆக்கப்பட வேண்டும் என்று பாவேந்தர் விரும்பினார். அதில் நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, சரோஜா தேவி ஆகியோர் நடிக்க ஏற்பாடாகியிருந்தது. இயக்குனர் பீம்சிங் படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருந்தார். பாண்டியன் பரிசுப் படத்திற்கான இயற்கைக் காட்சிகளை மைசூரில் எடுக்க வேண்டுமென்று பாவேந்தர் விரும்பினார்; அப்படத்தில் வரும் போர்க் காட்சிகள் சிறப்பாக இருக்க, அழகிய பந்தயக் குதிரைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பீம்சிங்கிடம் கூறினார். பாவேந்தரின் பெரிய திட்டத்தையும் சுருங்கிய கையிருப்பையும் மோப்பம் பிடித்து அறிந்து கொண்ட படத்துறை நண்பர்கள் இவரைப் பார்த்தால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினர். 'வரலாற்றுப் படம் பிடிக்க நிறையச் செலவாகும்: ஏதாவது சமூகப் படம் எடுங்கள் ஒத்துழைக்கிறோம் என்று சொல்லி ஒர் ஆங்கில நாவலையும் இவர் கையில் திணித்து விட்டுச் சென்று விட்டனர். அதன்பிறகு அந்நாவலைத் திரைக்கதையாக்கி அதற்கு வசனமும் எழுதி முடித்தார் பாவேந்தர். எதை எழுதி என்ன பயன்? நடிகர்கள் வீடுகளுக்கு நடந்து நடந்து கால் ஒய்ந்ததுதான் மிச்சம். தமிழ்நாட்டுப் படத்துறைக்காரர்கள் செப்பிடு வித்தைக்காரர்கள். செப்பிடு வித்தை தெரிந்தவன்தான் படத்துறைக்குப் போக வேண்டும். பாவேந்தருக்குச் செப்பிடு வித்தை பழக்கமில்லாத ஒன்று. வெறுங்கையால் முழம் போடுவது தான் படத்துறையின் புகுமுகத்