பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 165 உணவை அவன் பாழடித்தான். ஒரு பெரிய உருண்டைப் புளியை எடுத்துப் பாத்திரத்தில் ஊற வைத்திருந்தான். அப்போது எதேச்சையாக உள்ளே வந்த என் தந்தையார் அதைப்பார்த்துவிட்டு எதற்காக இவ்வளவு புளி ஊற வைத்திருக்கிறாய்? என்று அவனைக் கேட்டார். குழம்புக்கும் இரசத்துக்கும் சேர்த்து ஊற வைத்திருக் கிறேன் என்று அவன் சொன்னான். உடனே அவருக்குக் கோபம் வந்துவிட்டது. எப்போதும் குழம்புக்கும் ரசத்துக்கும் தனித்தனியாகப் புளி ஊற வைக்க வேண்டும். ஒன்றாக ஊறவைத்தால் முதல்பாதி மிகுதியாகப் புளிக்கும்; மறுபாதி துவர்க்கும். அதனால் குழம்பின் சுவையும் கெட்டுவிடும்; இரசத்தின் சுவையும் கெட்டுவிடும். இரண்டாவது நாள் நான் சமைத்தேன். தானும் கற்றுக் கொள்வதாகச் சொல்லி அச்சமையல்காரன் என் அருகிலிருந்து அன்று கற்றுக் கொண்டான். என் தந்தையாரைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக, அயலூரிலிருந்து எங்கள் வீட்டைத் தேடி யாராவது அடிக்கடி வந்து கொண்டிருப்பார்கள். முதல் முறை ஒழுங்காக நடந்து கொண்டவர்களாக இருந்தால் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒத்துக் கொள்வார். ஒழுங்காக நடந்து கொள்ளாதவர்கள் வீட்டைத் தேடி மறுமுறை வந்து விட்டால் அவர்கள் பாடு திண்டாட்டந்தான் “யாரவ கூப்பிடு!.... போடா...! கூட்டமில்லை. போனமுறை வந்திருந்தப்ப பிட்நோட்டீஸ் போடல. சாப்பாடு சரியில்லை. ஒழுங்கா வண்டி ஏற்றி விடல. போ போ! வர முடியாது” என்று திட்டி அனுப்பிவிடுவார். கூட்டத்துக்குப் போகும்போது அவர் எந்த இடத்துக்குப் போகிறாரோ அந்த இடத்தின் தட்பவெப்ப நிலைக்கேற்ப உடை, போர்வைக் கம்பளிச் சட்டை ஆகியவற்றைப் பெட்டியில் வைத்து அனுப்புவோம். திரும்பி வரும்போது வெறும் பெட்டியும் அழுக்குத் துண்டும்தான் வரும்.கேட்பவர்களுக்கு அவற்றைக் கொடுத்து விட்டு வந்து விடுவார். ஒருமுறை வெளியூர் சென்றிருந்த போது வைர மோதிரத்தையும், கடிகாரத்தையும் கூட யாருக்கோ கொடுத்துவிட்டு வந்துவிட்டார். யாருக்கு அவர் எதைக் கொடுத்தாலும் வீட்டில் வாயைத் திறக்கக் கூடாது. திறந்தால் அன்று வீடு தலையாலங்கானந்தான். இன்றைய பேச்சாளர்கள் கூட்டத்திற்காக வெளியூர் சென்றால் ஆயிரம் ஐநூறு என்று வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். அன்றைய நிலை அப்படியில்லை. என் தந்தையார் கூட்டங்களுக்கு அயலூர் சென்று விட்டு வெறுங்கையோடு திரும்புவதுண்டு; சில நாட்களில் கைப்பணத்த்ைச் செலவு செய்துவிட்டு வருவதுண்டு. ஆகையால்