பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பாடிப் பறந்த குயில் என்று என்தந்தையாரைப் பார்த்து முறையிட்டார் என் தாயார். என் தந்தையார் எதுவும் பேசவில்லை. அமைதியாக எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் எந்தவிதம் சலனமும் தென்படவில்லை. அவ்வாறு அவர் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தது எங்கள் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது. நானும் என் தங்கையும் பள்ளிக்குச் சென்றுவிட்டோம். அடுத்த நாள் காலை நாங்கள் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது, என் தந்தையார் மிகவும் அன்போடு "இந்தாம்மா ரமணி இங்க வா!” என்று கூப்பிட்டார். நானும் ரமணியும் அவரருகில் சென்றோம். அவர் கையில் ஒரு தாள் இருந்தது. அத்தாளில் ஒரு பாடல் எழுதப்பட்டிருந்தது. அப்பாடலை இசையோடு பாடிக்காட்டி னார். அப்பாடல் மிகத் தெளிவாகவும், எங்கள் பிஞ்சுள்ளங்களில் பதியும்படியும் எழுதப்பட்டிருந்தது. நாங்கள் மெய்மறந்து எங்கள் தந்தையார் பாடிய பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தோம். தலைவாரிப் பூச்சூடி" என்று தொடங்கும் அப்பாடல் தந்தை பெண்ணுக்கு என்ற தலைப்பில் இசையமுது முதற்பகுதியில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் தாயினால் அலங்கரிக்கப்பட்டுப் பள்ளிக்கு அனுப்பப்படும் பள்ளிச் சிறுமியின் தோற்றமும், அவள் கண்ணிரும், தந்தையின் அறிவுரையும், கல்வியின் சிறப்பும் மிக அழகாக எடுத்துச் சொல்லப்படுகின்றன. இப்பாடல் திரைப்படப் பாடலாக வந்து தமிழகத்தில் நல்ல விளம்பரத்தைப் பெற்றதோடு, ஒவ்வொரு பெண்கள் பள்ளியிலும் பாடி ஆடி நடிக்கப்படுகிறது. எங்கள் தாயார் பள்ளி செல்லாமல் பிடிவாதம் செய்த என் தங்கையைப் பற்றி முறையீடு செய்தபோது, தந்தையார் முகத்தில் சலனமேதுமில்லாமல் எங்களைக் கூர்ந்து நோக்கியதன் பொருள் எனக்கு இப்போதுதான் விளங்கியது. மற்ற தந்தையராக இருந்தால் தாயருடன் சேர்ந்து கொண்டு பிள்ளைகளைத் திட்டித் தீர்த்திருப்பார்! ஏன்? அடித்தும் இருப்பர்! எங்கள் தந்தை பாவேந்தர் அல்லரோ? அவர் சிந்தனை உடனே கவிதையின் பக்கம் திரும்பி விட்டது. வீட்டிலே நடந்த இச்சிறுநிகழ்ச்சி, நாட்டுக்கே பாடமாக விளங்கும் இலக்கியமாக மலர்ந்துவிட்டது. என் தந்தையாருக்குச் சோதிடத்தில் ஈடுபாடு கிடையாது. எனினும் சோதிடம் வல்லார் ஒருவர் அவருக்கு நெருங்கிய நண்பர். அச்சோதிடர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார் சாப்பாட்டு வேளைக்கு! சோதிடமும் சொல்வார். உணவுண்டும் செல்வார்; கவிஞரைத் தவிர, புதுவையில் உள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட யாவருக்குமே அவர் சோதிடம் கூறுவதுண்டு.