பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பாவேந்தருடன் ஒருநாள் எழுதினார்கள்; இப்பொழுது எல்லோரும் காதலைப் பற்றியே எழுதுகிறார்கள். நீ தான் இயற்கையைச் சுவைத்து எழுதியிருக்கிறாய். கழுதையைப் பற்றி எழுதினாலும் காப்பியச் சுவையோடு இருக்க வேண்டும்" நான் தலையை மட்டும் ஆட்டினேன். 'நூல்கள் ஏதாவது, எழுதியிருக்கிறாயா?” ஆகா! இந்தக் கேள்வியைக் கேட்டதும் பாலில் பழம் நழுவிய கதையாக இருந்தது எனக்கு. ஏனெனில் மழலை இன்பம் என்ற கையெழுத்துப் படியைச் சிறப்புரை பெறவே எடுத்துச் சென்றேன். கையிலிருந்த-இல்லை, பையில் மறைத்து வைத்திருந்த ஏட்டை நீட்டினேன். மூக்குக் கண்ணாடி ஏறியது; அதில் என் பிழை உருப் பெருக்காடியில் தெரிவதுபோல் தெரியப் போகிறது! நண்பர்கள் சொன்னபடி நமக்கு மரியாதை நடக்கப்போகிறது என்று அவர் முகத்தையே படித்துக் கொண்டிருந்தேன். 'நன்றாக எழுதுகிறாயே!... ஆனால் இதோ... இங்கே.பார். குற்றியலுகரத்தைப் பிரித்துப் போட்டிருக்கிறாய். புணர்ச்சியில் ஒராசை குறைகிறது. இது தவறு. இப்படி வரும்போது ஏகாரத்தைச் சேர்த்து விடு!" தலையை மட்டும் சாமி மாட்டைப் போல் ஆட்டினேன். "வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் இன்னும் உனக்குச் சரியாகத் தெரியவில்லை: (சில நூற்பாக்களைக் கூறி) இவற்றைப் படி: பெயரெச்சத்தில் வல்லெழுத்து மிகாது; ஆனால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மிகும்..." ஆகா! நான் பெற்ற பேறுதான் என்னே! எனக்கு ஆசிரியராய் இலக்கணம் கற்பிக்கிறார்! நான் கற்கிறேன்! இதை மறக்க முடியுமா? "நீ கையெழுத்தேட்டைக் கொண்டு வந்ததுதான் சரி! அப்பொழுது தான் பிழைகளைத் திருத்தி உண்மையான சிறப்புரை வழங்க முடியும். இதைப் பார்!... ஒரு நூலை எடுத்துக் கொடுக்கிறார்; நான் வாங்கிப் பார்க்கிறேன். ஒரு தமிழ்ப் பேராசிரியர் எழுதிய பாடல் தொகுப்பு, அச்சிடப்பட்டுள்ளது... (பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.) இவன் தமிழ்ப் பேராசிரியன்! எவ்வளவு பிழைகள்! அச்சிட்ட பின் எப்படித் திருத்துவது? சிறப்புரை கொடுக்கவில்லையானால் இவன் பெரிய பாவேந்தன்!. முரடன்! என்பான்?" என்னுடைய நூலைப் படித்துத் திருத்தி விட்டார்.