பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 277 காதுக்கு எட்டியதும் அளவு கடந்த கோபம் கொண்டார். "என் வசனத்தை வெட்டணும்னா என் காண்ட்ராக்டையே கேன்சல் செய்யுங்க" என்று சத்தம் போட்டார். அதற்குப் பிறகு பாவேந்தருக்கும் டி.ஆர்.எஸ்.ஸ்-க்கும் ஒத்துவரவில்லை. தமது விருப்பத்துக்கு மாறாக யார் நடந்து கொண்டாலும் டி.ஆர்.எஸ். ஸ்டுடியோவுக்குள் வைத்துக் கொள்ளமாட்டார். தமது விருப்பத்துக்கு மாறாக எது நடந்தாலும் பாவேந்தர் அங்கு இருக்க மாட்டார். எனவே பாவேந்தர் பாண்டி திரும்பினார். அதன்பிறகு மாடர்ன் தியேட்டர்ஸுக்குள் அவர் காலடி எடுத்து வைக்கவில்லை. ஏழெட்டு ஆண்டுகள் கழித்துத் சென்னையிலிருந்து எனக்குப் பாவேந்தர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவருடைய பாண்டியன் பரிசின் காப்பியத் தலைவனான வேலன் பாத்திரத்துக்கு நான் ஏற்கனவே ட்ரீட்மெண்ட் எழுதியிருந்தேன். சேலத்தில் இருந்தபோதே அதை அவரிடம் காட்டினேன். "இதைப் படமாகச் சுந்தரம் எடுத்தால் எடுக்கட்டும்; இல்லாவிட்டால் கிடக்கட்டும். வை பார்க்கலாம்” என்று அப்போது கூறிவிட்டார். இப்போது அந்த ட்ரீட்மெண்டை எடுத்துக் கொண்டு எழும்பூர் விக்டோரியா ஹோட்டலுக்கு உடனே வரும்படி கடிதம் எழுதியிருந்தார்; நானும் அவ்வாறே சென்றேன். என்னைச் சந்தித்ததும் படத்துக்கு யார் யாரைப் போடலாம் என்று கேட்டார். காப்பியத் தலைவன் வேலன் பாத்திரத்திற்கு சிவாஜியைப் போடலாம் என்றேன். அவர் சற்றுத் தயங்கினார். படத்துக்கு ஸ்டார் வேல்யூ தேவை என்று நான் வற்புறுத்தினேன். உடனே அப்போது முதலமைச்சராக இருந்த காமராசரைத் தொலைபேசியில் கூப்பிட்டுத் தம் படத்தில் நடிக்கும்படி சிவாஜிக்கு சொல்லும்படி கேட்டுக் கொண்டார். காமராசரும் உடனே சிவாஜிக்குத் தொலைபேசியில் அக்கருத்தைத் தெரிவித்தார். சிவாஜியும் ஒப்புக் கொண்டார். அடுத்தநாள் காலை பாவேந்தர், முருகதாசா, நான் ஆகிய மூவரும் சிவாஜியின் வீட்டுக்குப் போனோம். அங்கு எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாண்டியன் பரிசுக் கதையைப் பற்றிப் பாவேந்தர் சொன்னார். நான் பலமுறை படித்திருக்கிறேன்; நானே வேலன் பாத்திரத்தில் தடிக்கிறேன்" நாளைக்குப் பேசுவோம்" என்று கூறி சிவாஜி எழுந்தார். நாங்களும் விடுதி அறைக்குத் திரும்பினோம். சிவாஜி நாளைக்குன்னு ஏன் சொன்னா..? என்று கேட்டார் பாவேந்தர், நாங்கள் தெரியவில்லை. என்றோம்.