பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 289 ழ்ந்திடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால் வண்டு காதலினால்-நாதா தாவிடுதே இன்பம் மேவிடுதே. என்ற பாடலுக்கு ரெகார்டிங் நடந்து கொண்டிருந்தது. கமழ்ந்திடும்' என்ற சொல் உச்சரிப்பு கடினமாக இருந்தது. இன்னும் எளிய சொல்லாக இருந்தால் ரெக்கார்டிங்கில் அது தெளிவாக இருக்கும் என்று இசையமைப்பாளர் கருதினார். உடனே அங்கிருந்த பாவேந்தரை அணுகிக் "கமழ்ந்திடும்” என்ற சொல் ரெகார்டிங்கில் தெளிவாக இல்லை. அதை மாற்றி இன்னும் எளிமையான சொல்லொன்றைப் போட்டுக் கொடுங்கள் என்று கேட்டார்கள். அதற்குப் பாவேந்தர் வாயிடுக்கில் சிகரெட்டை இடுக்கிய வண்ணம் அதெல்லாம் மாத்த முடியாது. ரெக்கார்டிங் தெளிவா இல்லைன்னா சுந்தரத்துக்கிட்ட சொல்லி ரெகார்டிங் மெஷினை மாத்தச் சொல்லு!” என்று கூறினார். பிறகு இசையமைப்பாளர் என்னிடம் வந்து அச்சொல்லை மாற்றிக் கொடுக்கும்படி கேட்டார். நான் குலுங்கிடும் பூக்களெல்லாம் என்று மாற்றிக் கொடுத்தேன். இதைக் கேள்விப்பட்டதும் பாவேந்தருக்கு என் மேல் கோபம். இந்த நிகழ்ச்சியின் எதிரொலியாகச் சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் மற்றொரு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஏ.வி.எம். மில். 'பராசக்தி படப்பிடிப்பு நடந்த கொண்டிருந்தது. பராசக்திக்குரிய பாடல்கள் ரெகார்டிங் செய்து கொண்டிருந்தனர். பாவேந்தர் ரெகார்டிங் நடந்த இடத்தில் ஏதோ உரக்கப் பேசிக் கொண்டிருந்தார். அவரைப் பேசாமல் இருக்கும் படி கேட்டுக் கொண்டனர். அதற்குப் பாவேந்தர் ஏ. என் பேச்சும் ரெகார்ட் ஆயிடும்னு பயப்படறியா. ரெக்கார்டிங் மெஷின் என்னோட பாட்டில கமழ்ந்திடும் கற சொல்லை ரெகார்டு பண்ண முடியல... எம் பேச்சைத்தா ரெகார்டு பண்ணப் போவுதா.. போப்பா.." என்று சலிப்போடு சொன்னார். மாடர்ன் தியேட்டர்ஸில் கல்யாணி என்ற படத்துக்கு Wire Recording நடந்து கொண்டிருந்தது. இசையமுதில் உள்ள பாவேந்தரின் அதோ பாரடி என்று தொடங்கும் வண்டிக்காரன் பாட்டு ரெகார்டிங் ஆகிக் கொண்டிருந்து. பதிவாகி முடிந்ததும் அப்பாட்டை 'ரெகார்டிங் அறைக்குள் வைக்கச் சொல்லி வெளியில் இருந்து கேட்டார் பாவேந்தர். அதன் இசையமைப்பு அவருக்குத் திருப்தித் தரவில்லை. பாவேந்தர் அருகில் இருந்தவர்களைப் பார்த்து, ஏப்பா! சங்கீதம் போட்றவ வண்டியோட்டி இருக்கானா? தூரத்தில் இருந்து